Author: Sahabudeen

தமிழகத்தின் அனைத்து . பொது மக்கள் மற்றும் பல சாதி இன்றிய பொது இயக்கத்தினர்கள். சமூக ஆர்வலர்கள்.பல சங்கத்தினர்கள். தமிழகத்தின் சுயநலம் இன்றி ஏழை எளிய மக்களின் சேவகன். தமிழகத்தின் அனைத்து மக்கள் சக்தி இயக்கத்தின் நிறுவனர் கலைமகன் எஸ்.வெங்கடேஷ் அவர்களை ராஜ்ய சபா எம்.பி.யாக்க விரும்புகிறார்கள்…… சென்னையில் இருந்து பல மாவட்டங்களில் குறிப்பா செங்கல்பட்டு மாவட்டம் பெரும்பாக்கம் பகுதியை சிறப்பாக மக்கள் பணி அனைத்து மக்கள் சக்தி இயக்கத்தின் தலைவரும் நிறுவனமான கலைமகன் எஸ் வெங்கடேசன் அனைத்து மக்கள் சக்தி இயக்கத்தின் கோட்பாடுகளான சாதிகள் இல்லையடி பாப்பாகுலத் தாழ்ச்சி உயர்ச்சி சொல்லல் பாவம் என்ற மகாகவி பாரதியாரின்வார்த்தைகளுக்கு ஏற்ப சாதி மத பேத மற்ற சமுதாயத்தை உருவாக்கிடவும் அனைவரையும் ஒன்றிணைந்து மக்களிடையே அமைதியும் ஒற்றுமையும்ஏற்படுத்துவதற்காகவும்எண்ணற்ற ஏழைஎளிய மக்களின் தேவை அறிந்துஉதவிகள் புரிந்திடும்இந்த இயக்கம் ஆரம்பிக்கப்பட்டு இந்த இயக்கம் சிறப்பான செயல்பாடுகளால் வெற்றி நடை போட்டு வருகிறது பல்வேறு மாவட்டங்களில் பல்…

Read More

2024 நாடாளுமன்ற மக்களவை தேர்தலில் பா.ஜ.க.வுடன் இணைந்து டி.டி.வி.தினகரன் தலைமையிலான அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் (அ.ம.மு.க.) போட்டியிட உள்ளது. இந்நிலையில் பா.ஜ.க. கூட்டணியில் இடம்பெற்றுள்ள அ.ம.மு.க.வுக்கு 2 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. இதற்கான ஒப்பந்தம் தமிழக பா.ஜ.க. தலைமை அலுவலகமான கமலாலயத்தில் இன்று கையெழுத்தானது. இதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன், “நான் ஒரு தொகுதி கூட போதும் என்றேன். பா.ஜ.க. தரப்பில் 2 தொகுதியிலாவது போட்டியிட வேண்டும் என வலியுறுத்தினார்கள். அதன்படி தற்போது 2 தொகுதிகள் கிடைத்துள்ளன. இதற்கான ஒப்பந்தம் தமிழக பா.ஜ.க. தலைமை அலுவலகமான கமலாலயத்தில் இன்று கையெழுத்தானது. இதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன், “நான் ஒரு தொகுதி கூட போதும் என்றேன். பா.ஜ.க. தரப்பில் 2 தொகுதியிலாவது போட்டியிட வேண்டும் என வலியுறுத்தினார்கள். அதன்படி தற்போது 2 தொகுதிகள் கிடைத்துள்ளன. இந்த நிலையில் டி.டி.வி.தினகரனின் அ.ம.மு.க.விற்கு ‘குக்கர்’ சின்னத்தை…

Read More

நாடாளுமன்ற தேர்தலில் வெற்றியை தீர்மானிப்பது மக்கள் தான். நாடாளுமன்ற தேர்தலுக்குப் பிறகு அ.தி.மு.க. என்பது என்ன? என்று எல்லோருக்கும் புரியும், மூன்று அணியாக இருக்கின்ற அ.தி.மு.க. ஒன்றாக இணைய வாய்ப்பு வந்துள்ளதாக எனது அனுமானத்தில் கருதுகிறேன். தமிழக அரசு தேர்தல் காரணம் சொல்லி எந்தவித ஆக்கப்பூர்வமான செயல்களிலும் ஈடுபடாமல் உள்ளது. தூத்துக்குடியில் துப்புரவு பெண் ஒருவர் கொல்லப்பட்டது வேதனை அளிக்கிறது. முதல்-அமைச்சர் கட்டுப்பாட்டில் இருக்கும் காவல்துறை என்ன செய்து வருகிறது? என்று தெரியவில்லை. ஜெயலலிதா ஆட்சியின்போது நிர்வாக ரீதியாக இது போன்ற எந்த தவறும் நடந்தது கிடையாது. 2026 தேர்தல் என்பது எங்களுக்கும் தி.மு.க.வுக்கும் நேரடி போட்டியாக இருக்கும். அந்த தேர்தலில் நான் யார் என்பதை காட்டுவேன். தி.மு.க. என்ன ஆகும் என்பதையும் கணித்து வைத்துள்ளேன். மத்தியில் எந்த ஆட்சி வரவேண்டும் என்று மக்கள் உணர்ந்து வாக்களிக்க வேண்டும். அதாவது இதுவரை ஆட்சி செய்தவர்களில் எந்த ஆட்சி மக்களுக்கு பயன்பட்டதோ அந்த…

Read More

ஐ.நா.சபையின் நிவாரண உதவிகள் மையத்தில் செயல்படும் தன்னார்வலர்கள் மீதுதாக்குதலில் உயிர்இழப்புகள் ஏற்பட்ட உள்ளது இஸ்ரேலிய இரானுவத்தின் காட்டுமிராண்டிதான தாக்குதலை சர்வதேசகண்டித்து நடவடிக்கை எடுக்க வேண்டுமெனதமிழ்நாடு மக்கள்நலன்காக்கும்இயக்கத்தின் மாநில பொதுச்செயலாளர் வலியுறுத்தல் பலஸ்த்தீன் இஸ்ரேல்போர் கடந்த 166, நாட்களை கடந்த நிலையில் தொடர்ச்சியாக சர்வதேச சட்டங்களைகாலில் போட்டு மிதிக்கும் செயலில் இஸ்ரேல் அரசு செயல்பட்டு வருகிறது ஜ.நா.சபை கண்டித்தும் உலக குற்றவியல் நீதிமன்றம் (ICJ)உத்தரவு பிறப்பித்தும் அவற்றை புறம் தள்ளிவிட்டுதொடர்ந்து பலஸ்தீன்மக்களை இனப்படுகொலை செய்யும் இஸ்ரேல் அரசு அதிலும் குறிப்பாக குழந்தைகள், பெண்கள், இளைஞர்கள், மருத்துவமனைகள்பள்ளிக்கூடம், உணவு சேமித்து வைக்கும்கட்டிங்கள் என அனைத்தும் மீதும் மீலோச்சதனமான தாக்குதலில் இதுவரை 33000/அப்பாவி பொதுமக்கள் இருந்துள்ளார்கள் இதில் 1வயது முதல் 12 வரை குழந்தைகள் 13000/பேர்கள் கொள்ள பட்டுள்ளார்கள் மேலும் 75000/பேர் காயம்பட்டும் ஊனம் அடைந்துள்ளார்கள்சுமார் 50000ஆயிரத்தும் மேற்பட்ட கட்டிங்கள் இஸ்ரேல் ரானுவத்தினால் வான்வழி தாக்குதலில் உடைக்கபட்டுள்ளது அதில் வீடுகள்,வணிக வளாகங்கள், பள்ளிக்கூடங்கள் மசூதிகள்,கிறஸ்தவ தேவாலயங்கள்,…

Read More

செங்கல்பட்டு மாவட்டம்… செங்கல்பட்டு பேருந்து நிலையத்திலிருந்து புறப்படும் மகளீர் கட்டணமில்லாப் பேருந்து செங்கல்பட்டு பழையபேருந்து நிலையத்தில் நிற்க்காமல் செல்கிறது.கோடை வெப்பத்தின் தாக்கத்தில் குழந்தைகளுடன் நின்றிருக்கும் மகளீர் நிற்க்காமல் செல்லும் பேருந்தை போகும் பாதையை வேதனையேடு குழந்தைகளுடன் பார்த்துக் கொண்டிருந்தனர்.செங்கல்பட்டு பேருந்து நிலையத்திலிருந்து புறப்படும் மகளீர்கட்டணம் இல்லாப்பேருந்துகள் புறப்படும் 10 நிமிடத்தில் சுமார் 5 பேருந்துகள் ஓன்றன்பின் ஒன்றாக செல்கிறது.இப்படி செல்லும் பேருந்துகள் முதலில் செல்லும் இரண்டு பேருந்துகளில் மட்டும் பயணிகள் அதிக அளவில் ஏறிசெல்கின்றனர், பின்னர் வரும் 3 பேருந்துகள் பயணிகள் அதிகம் இல்லாமல் செல்வதால் அரசு அறிவித்த மகளீர் கட்டணம் இல்லா பேருந்து திட்டம் மகளீருக்கு பயன்படாமல் இருப்பதால் இத்திட்டம் செங்கல்பட்டு மாவட்டத்தில் தோல்வி அடைந்துள்ளது..இதனை கருத்தில் கொண்டு,இதனை பேருந்து பணிமனை நேரக்காப்பாளர் கருத்தில் கொண்டு இத்திட்டம் மகளீர்க்கு பயண்படும் விதமாக பேருந்தின் நேர அட்டவணையை மாற்றி அமைத்து உதவுமாறு பொதுமக்கள் பெரிதும் எதிர்பார்க்கின்றனர்.

Read More

சென்னை ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க கட்சி தலைமை அலுவலகத்தில் 2024 மக்களவைத் தேர்தலில் போட்டியிடும் 16 வேட்பாளர்கள் அடங்கிய முதற்கட்ட பட்டியலை வெளியிட்டார். அதனை தொடர்ந்து எடப்பாடி பழனிசாமி செய்தியாளர் சந்திப்பில் கூறியதாவது: 2014 தேர்தலில் அனைத்து தொகுதிகளிலும் தனித்து போட்டியிட்டு வெற்றி பெற்ற இயக்கம் அ.தி.மு.க., 3 ஆண்டுகளில் தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துள்ளது. அ.தி.மு.க. வுக்கு மக்கள் செல்வாக்கு அதிகரித்துள்ளது. மக்களவைத்தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணி வெற்றி பெறும். மக்களவைத்தேர்தலின் அறிக்கை விரைவில் எதிர்பார்க்கலாம். கூட்டணியை நம்பி அ.தி.மு.க இல்லை. யார் வந்தாலும் வரவேற்போம் என்றார்.

Read More

நாடாளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க. சார்பில் போட்டியிடும் 16 வேட்பாளர்கள் அடங்கிய முதற்கட்ட பட்டியலை அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டார். அ.தி.மு.க. கூட்டணியில் தேமுதிகவுக்கு 5 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. எஸ்.டி.பி.ஐ., புதிய தமிழகம் கட்சிக்கு தலா ஒரு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அ.தி.மு.க. முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் விவரம்:- 1 ) வட சென்னை ராயபுரம் ஆர்.மனோ 2 ) தென் சென்னை டாக்டர் ஜெ.ஜெயவர்த்தன் 3 ) காஞ்சிபுரம் – ராஜசேகர் 4 ) அரக்கோணம் – ஏ.என்.விஜயன் 5 ) கிருஷ்ணகிரி – ஜெயபிரகாஷ் 6) ஆரணி – கஜேந்திரன் 7 ) விழுப்புரம் – பாக்யராஜ் 8 ) சேலம்- விக்னேஷ் 9 ) நாமக்கல் – தமிழ்மணி 10 ) ஈரோடு – ஆற்றல் அசோக்குமார் 11) நாகை சுர்ஜித் சங்கர் 12) மதுரை சரவணன் 13) தேனி – வி.டி.நாராயண சாமி 14) கரூர்…

Read More

புதுச்சேரி கவர்னர் மாளிகையில் முன்னாள் கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:- புதுச்சேரி மக்களின் அன்புக்கு நான் நன்றி கூறுகிறேன். அவர்கள் அபரிமிதமான அன்பினை என் மீது பொழிந்தார்கள். இந்த அன்பு தொடரும். புதுச்சேரி மக்களுக்கு சில நேரங்களில் கடுமையான முடிவுகளை எடுத்து சேவை செய்தேன். இந்த வாய்ப்பினை கொடுத்த பிரதமர், உள்துறை மந்திரி, ஜனாதிபதிக்கு என் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். புதுச்சேரியில் பணி செய்ததை என்னால் மறக்க முடியாது. நல்ல திட்டங்களை செயல்படுத்த மனசாட்சிப்படி பணி செய்தேன். 3 மாத பொறுப்பு என்று கூறி எனக்கு 3 வருடங்கள் வாய்ப்பு கொடுத்தனர். இதற்கான ஆண்டவனையும், ஆள்பவரையும் நன்றியோடு நினைவு கூறுகிறேன். தமிழில் பதவிப்பிரமாணம், கவர்னர் உரையை வாசித்தேன். இப்போது மக்கள் பணி செய்ய முழுமனதோடு ராஜினாமா செய்துள்ளேன். இது நானாக எடுத்த முடிவு. என்னை யாரும் நிர்ப்பந்திக்கவில்லை. தெலுங்கானாவில் 300 ஊழியர்கள் என்னை அழுதுகொண்டே வழியனுப்பினார்கள். இன்னும் 6 மாத…

Read More

நாடாளுமன்ற தேர்தல் நெருங்கும் நிலையில், தி.மு.க. தனது கூட்டணியை அறிவித்து, தொகுதி பங்கீட்டையும் நிறைவு செய்துள்ளது. அ.தி.மு.க.வை பொறுத்தவரை தே.மு.தி.க., புதிய தமிழகம் உள்ளிட்ட கட்சிகளுடன் பேச்சுவார்த்தையை நடத்தியிருக்கிறது. ஆனாலும் இதுவரை உடன்பாடு எட்டப்படவே இல்லை. தற்போது தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் அ.தி.மு.க. பேச்சுவார்த்தை குழுவினர், தங்களது கூட்டணியை இறுதி செய்யும் வகையில் பேச்சுவார்த்தையை நடத்தி வருகிறார்கள். இந்த நிலையில், சென்னையில் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி மற்றும் எஸ்.டி.பி.ஐ. கட்சி தலைவர் நெல்லை முபாரக் ஆகியோர் சந்தித்து பேசி வருகின்றனர். தேர்தல் கூட்டணி மற்றும் தொகுதி பங்கீடு தொடர்பாக பேச்சுவார்த்தை நடந்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Read More

தூத்துக்குடி மாவட்டங்களில் உடன்குடி பகுதியில் உற்பத்தியாகும் கருப்பட்டி புகழ்பெற்றதாகும். தமிழ்நாடு மட்டுமல்லாமல் இந்தியா முழுவதும் உடன்குடி கருப்பட்டி கிடைக்கும். தற்போது பனை மரங்களில் பதநீர் எடுக்கும் சீசன் தொடங்கிவிட்டது. குறைந்த அளவு பதநீர் கிடைப்பதால் சிலர் அதை உடனுக்குடன் விற்பனை செய்து வருகின்றனர். சிலர் மூன்று நாள் வரை பக்குவப்படுத்திவைத்து பின்னர் கருப்பட்டி ஆக உற்பத்தி செய்கின்றனர். புதிய கருப்பட்டி ஒரு கிலோ ரூ. 300 வரை விற்பனை செய்யப்பட்டு வருகிறது. தற்போது புதிய கருப்பட்டியை மக்கள் அதிக அளவில் விரும்பி வாங்கிச் செல்கின்றனர். மேலும் ஒரு சில வியாபாரிகள் புதிய கருப்பட்டியை வாகனங்களில் வைத்து ஊர் ஊராகக் கொண்டு சென்று விற்பனை செய்து வருகின்றனர். பழைய கருப்பட்டி கிலோ ரூபாய் 400 வீதம் விற்பனை செய்யப்படுகிறது. அத்துடன் 10 கிலோ எடையுள்ள பழைய கருப்பட்டி சிப்பம் ரூபாய் 3,800-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

Read More