தேசிய முன்னேற்றக் கழகம் நிறுவன தலைவர் ஜி ஜி சிவா வெளியிட்டுள்ள கண்டன
வாக்கு திருட்டை கண்டிக்காத அண்ணா ஹசாரே ஒரு நாடகவாதி ஜி ஜி சிவா தாக்கு
தேசிய முன்னேற்றக் கழகம் நிறுவன தலைவர் ஜி ஜி சிவா வெளியிட்டுள்ள கண்டன அறிக்கையில்
சென்ற காங்கிரஸ் ஆட்சியில் ஏதோ தன்னை பெரிய தேச பக்தி என்றும் மிகப்பெரிய சமூக ஆர்வலர் என்றும் தியாகி என்றும் மக்கள் மத்தியில் தன்னை முன்னிலைப்படுத்தி உண்ணாவிரத போராட்டத்தை எல்லாம் முன்னெடுத்து பாஜக ஆட்சி மலர காரணமாய் இருந்ததாக தொடர்ந்து பல குற்றச்சாட்டுகள் அண்ணா ஹசாரே மீது இருந்து வந்தது அதேபோன்று 2014 இல் இருந்து இன்று வரை நாடு முழுவதும் இந்திய மக்கள் அதிலும் குறிப்பாக இஸ்லாமியர்கள் மற்றும் கிறிஸ்தவர்கள் பெரும் துயரத்திற்கு ஆளாகி வருகிறார்கள் இன்னும் சொல்லப் போனால் இஸ்லாமியர்கள் இந்தியா முழுவதும் பாஜக சங் பரிவார அமைப்புகளிடம் பல துயரங்களை அனுபவித்து வருவது மட்டுமல்லாமல் பல மாநிலங்களில் இஸ்லாமியர்கள் தன் உயிரை விட்டு இருக்கிறார்கள் இவர்களின் கோரப்பிடியில் எந்த இடத்திலும் அண்ணா ஹசாரே வாய் திறந்து பேசவில்லை நாடு பொருளாதாரத்தில் மிகவும் பின்தங்கி இருப்பதும் அரசுடைமை அனைத்தும் தனியார்மயமாக்கல் செய்வதும் தொடர்ந்த வண்ணம் பாஜக ஆட்சியில் இருந்தும் இதற்கும் வாய்ப்பு இருக்கவில்லை இப்போது உலகமே அதிர்ச்சி கொள்ளாக்கப்பட்ட விஷயம் வாக்குத்திருட்டு இந்தியாவில் நடைபெறுவதை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி அவர்கள் பத்திரிகையாளர்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் உண்மை ஆதாரங்களை எடுத்து வைக்கும் கூட தன்னை போராளியாக காட்டிக் கொள்ளும் அண்ணா ஹசாரே எதற்கும் வாய்மூடி மௌனமாக இருப்பது அண்ணா ஹசாரே வின் கபட நாடகத்தை காட்டுகிறது ஆகவே இது போன்று திடீர் தியாகியாக தன்னை காட்டிக் கொள்ளும் நபர்களை இந்திய மக்கள் கூர்ந்து கவனித்து வருகிறார்கள் இந்தியாவில் இனிவரும் காலங்களில் அண்ணா ஹசாரே போன்ற போலி போராளிகளை இந்திய மக்கள் நம்ப மாட்டார்கள் அண்ணா ஹசாரே இந்திய மக்களின் நலனை பற்றி பேச எந்த தகுதியும் இல்லை என்பதனை வாயிலாக தெரிவிக்கிறேன் தனது கடைசி காலத்திலாவது அண்ணா ஹசாரே மனசாட்சிக்கு கட்டுப்பட்டு மக்கள் மத்தியிலே நின்றால் அவருக்கு மோட்சம் கிடைக்கும் என்பதனை தெரிவித்துக் கொள்கிறேன் இவ்வாறு ஜிஜி சிவா அறிக்கையில் குறிப்பிட்டு இருக்கிறார்


