Close Menu

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    What's Hot

    ஒரு ஓட்டுக்கு ரூ.3000 … அதுவும் சத்தியம் வாங்கி.. நடிகர் ஜெய் ஆவேசம்…

    April 23, 2026

    சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே அரசுப் பள்ளி ஆசிரியை ஒருவர் பள்ளி வளாகத்திலேயே வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

    April 14, 2026

    மீண்டும் மீண்டுமா…, தவெகவுக்கு பதிலாக பாஜக வேட்பாளருக்கு வாக்கு கேட்ட விஜய்..!

    April 5, 2026
    Facebook X (Twitter) Instagram
    • Home
    • இந்தியா
    • தமிழ்நாடு
    • மாவட்ட செய்திகள்
    • உலகம் செய்திகள்
    • விளையாட்டு
    Facebook X (Twitter) Instagram
    Home » காதலி கண்முன்பு இந்தியர் கொலை; காரில் சிறுநீர் கழித்ததை தட்டிகேட்டதால் விபரீதம்
    இந்தியா

    காதலி கண்முன்பு இந்தியர் கொலை; காரில் சிறுநீர் கழித்ததை தட்டிகேட்டதால் விபரீதம்

    SahabudeenBy SahabudeenOctober 31, 2025No Comments1 Min Read
    Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    கனடா எட்மண்டனில் வசித்து வந்தவர் ஆர்வி சிங் சாகூ (வயது 55). இந்திய வம்சாவளியை சேர்ந்த இவர் சம்பவத்தன்று இரவு தனது காதலியுடன் ஒரு ஓட்டலுக்கு சாப்பிட சென்றார்.நள்ளிரவு அவர்கள் இருவரும் உணவு சாப்பிட்டு விட்டு வெளியில் வந்தனர். அப்போது அவரது கார் மீது ஒருவர் சிறுநீர் கழித்திருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். இது பற்றி ஆர்வி சிங் சாகூ அவரிடம் 3 ஏன் என் காரில் சிறுநீர் கழிக்கிறாய் என கேட்டார். அதற்கு அவர் நான் அப்படிதான் செய்வேன் என பதில் அளித்தார்.

    இது தொடர்பாக இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. வாக்குவாதம் முற்றவே ஆர்வி சிங்கை அந்த நபர் தலையில் ஓங்கி அடித்தார். இதில் நிலைகுலைந்த அவர் கீழே சரிந்து விழுந்தார்.

    இந்த சம்பவத்தை நேரில் பார்த்த அவரது காதலி இது பற்றி உடனே போலீசாருக்கு தகவல் கொடுத்தார். இதையடுத்து அதிகாரிகள் அங்கு விரைந்து வந்து மயங்கி கிடந்த ஆர்வி சிங் சாகூவை சிகிச்சைக்காக ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இருந்த பலன் அளிக்காமல் அவர் உயிர் இழந்துவிட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர். இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் அவரை கொன்றதற்காக கைப் பாபின் (வயது 40)என்பவரை கைது செய்தனர். தொடர்ந்து அவரிடம் விசாரணை நடந்து வருகிறது. கொலை செய்யப்பட்ட இந்திய வம்சாவளியான ஆர்வி சிங் சாகூ கனடாவில் தொழில் அதிபராக இருந்தவர் என்பவர் குறிப்பிடத்தக்கது.

    Post Views: 409
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    Sahabudeen

    Related Posts

    போட்டியில் இருந்து விலகுகிறேன்’ -திருமாவளவன் எடுத்த அதிரடி முடிவு

    April 5, 2026

    திருச்செந்தூர்: வாக்கு சேகரிக்கச்சென்ற அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனுக்கு பொதுமக்கள் எதிர்ப்பு

    April 5, 2026

    இன்ஸ்டாகிராம் பழக்கம்: கல்லூரி மாணவி பாலியல் வன்கொடுமை

    March 22, 2026
    Add A Comment

    Comments are closed.

    Top Selling Multipurpose WP Theme
    Categories
    • இந்தியா (1,067)
    • உலகம் செய்திகள் (24)
    • கல்வி – வேலை வாய்ப்பு (5)
    • சினிமா (13)
    • தமிழ்நாடு (183)
    • தொழில்நுட்பம் (5)
    • மாவட்ட செய்திகள் (281)
    • விளையாட்டு (22)
    Editors Picks
    Top Reviews
    Advertisement
    Demo
    Facebook X (Twitter) Instagram Pinterest Vimeo YouTube
    • Home
    • Buy Now
    © 2026 Kalaamkural. Designed by Focus Web Solutions.

    Type above and press Enter to search. Press Esc to cancel.