தூத்துக்குடி மாவட்டம் எட்டையபுரத்தில் தேசிய கவி என போற்றப்படும் பாரதியாரின் 144வது பிறந்த நாளை கொண்டாடும் விதமாக பாரதியாரின் நினைவு மண்டபத்தில் அனைத்துலகத் தமிழ்ச் சங்கம் மற்றும் மதுரை காமராசர் பல்கலைக்கழகம் இணைந்து நடத்திய பாரதி எனும் பேராற்றல் தலைப்பில் கவியரங்கம் மற்றும் புத்தக வெளியீட்டு விழாவில் விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்த கவிஞர்.பா.பாலசரணன் அவர்களுக்கு பாரதி வழி கவிஞர் விருது மற்றும் சான்றிதழ் வழங்கி கெளரவிக்கப்பட்டது. இவ்விருதினை தமிழக அரசின் பாரதி விருதாளர் பாரதிசுகுமாரன் அனைத்துலகத் தமிழ்ச் சங்க தலைவர் மற்றும் மதுரை காமராசர் பல்கலைக்கழக தமிழியல் துறை தலைவரும் வழங்கினர்.மற்றும் பாரதி எனும் பேராற்றல் தலைப்பில் எழுதப்பட்ட கவிதை புத்தகம் வெளியிடப்பட்டு பாரதியின் கவிதையும் தேச விடுதலையில் பாரதியின் புரட்சி கவிதைகள் ஆற்றிய பங்கு என்று பாரதி சுகுமாரன் அவர்கள் பேசினார்.


