மக்களால் புறம் தள்ளப்பட்ட” அரசியல் மகா நடிகன் ஆர்.பி.உதயகுமார் அவர்களுக்கு நாவடக்கம் வேண்டும் . தமிழக வெற்றிக் கழக மதுரை மத்திய தொகுதி எம்எல்ஏ வி.எம்.எஸ்.முஸ்தபா கண்டன அறிக்கை:எதிர்கட்சி அந்தஸ்தை கூட பெற முடியாமல் தத்தளித்து கொண்டு இருக்கிறீர்கள். சமீபத்தில் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் அதிமுக போட்டியிட்ட 167 தொகுதிகளில், 108 தொகுதிகளில் தனது டெபாசிட்டை இழந்து விட்டதை மறந்து விட்டு ஆர்,பி.உதயகுமார் புறம் பேசி வருகிறார்.திருமங்கலம் தொகுதியில் களமிறங்கிய உங்களை மக்கள் அங்கீகாரம் அளிக்காமல் புறந்தள்ளி இருக்கிறார்கள் என்பதை மாஜி மாண்புமிகு ஆர்.பி.உதயகுமார் மறந்து விட்டு, இன்னும் பழைய நினைப்பில் பிதற்றி கொண்டு இருக்கிறார். தமிழக வெற்றிக் கழகம் ஆட்சி பொறுப்பேற்று ஒரு மாதம் மட்டும் பூர்த்தி அடைந்து உள்ளது. அதற்குள் அவதூறுகளை வாரி இறைத்து ஆட்சிக்கு அவப்பெயர் ஏற்படுத்தி விடலாம் என உங்களின் பகல் கனவு ஒரு போதும் நிறைவேறாது. மக்கள் தமிழக வெற்றிக் கழகம் மீதும் மாண்புமிகு முதலமைச்சர் மீது அதீத நம்பிக்கை வைத்து இருக்கிறார்கள்.அதற்கு பின்னர் அந்தர் பல்டி அடித்து எடப்பாடி பழனிச்சாமிக்கு நீங்கள் காவடி தூக்


