Homeதமிழ்நாடுமாவட்ட செய்திகள்மூக்குப்பீறி பகுதியில் கஞ்சாவை பதுக்கி விற்ற வாலிபர் கைது

மூக்குப்பீறி பகுதியில் கஞ்சாவை பதுக்கி விற்ற வாலிபர் கைது

மூக்குப்பீறி பகுதியில் கஞ்சாவை பதுக்கி விற்ற வாலிபர் கைது  

மூக்குப்பீறி பகுதியில் கஞ்சாவை பதுக்கி விற்ற வாலிபரை போலீசார்  கைது செய்துள்ளனர்.நாசரேத் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட மூக்குப்பீறி பகுதியில்  கஞ்சாவை பதுக்கி வைத்து விற்கப்படுவதாக நாசரேத் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில் நாசரேத் போலீசார்   அப்பகுதியில் சோதனை நடத்தினர். அப்போது அதில் பைக்கில் வந்த ஒருவரை பிடித்து விசாரித்தனர். அப்போது அவர்  மூக்குப்பீறி பகுதியைச் சேர்ந்த தினேஷ் (24) என்பதும், கஞ்சாவிற்பனைக்காக  வைத்திருந்து தெரியவந்தது. உடன் அவரை கைது செய்து  அவரிடமிருந்து 120 கிராம் கஞ்சா மற்றும் ஒரு இருசக்கர வாகனத்தையும் போலீசார்  பறிமுதல் செய்தனர். 

Must Read