மக்கள் தொகை கணக்கெடுப்பு 2026 திட்டத்தின் கீழ், நாடு முழுவதும் முதல்முறையாக டிஜிட்டல் முறையில் மக்கள் தொகை கணக்கெடுப்பு மேற்கொள்ளப்படுகிறது.அதன் ஒரு பகுதியாக, கும்பகோணத்தில் நடைபெற்ற மக்கள் தொகை கணக்கெடுப்பு பணிகளை மாண்புமிகு வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் ர.வினோத் எம் எல் ஏ. வெள்ளிக்கிழமை தொடங்கி வைத்தார்.இந்நிகழ்வில், டிஜிட்டல் தொழில்நுட்பத்தின் மூலம் வீடு தோறும் மக்களின் விவரங்கள் துல்லியமாகவும் விரைவாகவும் பதிவு செய்யப்படுவதன் அவசியம் குறித்து விளக்கப்பட்டது. மேலும், மக்கள் கணக்கெடுப்பு பணியாளர்களுக்கு முழு ஒத்துழைப்பு வழங்குமாறு பொதுமக்களிடம் அமைச்சர் வினோத் கேட்டுக்கொண்டார்.மக்கள் தொகை கணக்கெடுப்பு 2026, டிஜிட்டல் முறையில் நடைபெறுவதன் மூலம் தரவுகளின் துல்லியம், விரைவான சேகரிப்பு மற்றும் வெளிப்படைத்தன்மை உறுதி செய்யப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.செய்தியாளர் அ.மகேஷ்
