Homeதமிழ்நாடுமாவட்ட செய்திகள்காரைக்காலில் தேசிய விளையாட்டு தினத்தை முன்னிட்டு ONGC சார்பில் சைக்கிள் பேரணி

காரைக்காலில் தேசிய விளையாட்டு தினத்தை முன்னிட்டு ONGC சார்பில் சைக்கிள் பேரணி

காரைக்காலில் தேசிய விளையாட்டு தினத்தை முன்னிட்டு ONGC சார்பில் சைக்கிள் பேரணி200-க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு – உடற்தகுதி மற்றும் விளையாட்டு விழிப்புணர்வுதேசிய விளையாட்டு தினத்தை முன்னிட்டு, ஃபிட் இந்தியா இயக்கத்துடன் இணைந்து ONGC காவேரி அசெட் சார்பில் காரைக்காலில் மாபெரும் சைக்கிள் பேரணி நடைபெற்றது.ONGC காவேரி அசெட், காரைக்கால் காவல்துறை மற்றும் உள்ளூர் மாணவர்களுடன் இணைந்து ஏற்பாடு செய்த இந்த சைக்கிள் பேரணியில், ONGC அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள், மாணவர்கள், விளையாட்டு ஆர்வலர்கள் உள்ளிட்ட 200-க்கும் மேற்பட்டோர் ஆர்வத்துடன் பங்கேற்றனர்.காரைக்கால் முதுநிலை காவல் கண்காணிப்பாளர் வினய் குமார் கட்ஜ் மற்றும் ONGC காவேரி அசெட்டின் GGM மற்றும் அசெட் மேலாளர் கே.வி. இளங்கோ ஆகியோர் கொடியசைத்து சைக்கிள் பேரணியை தொடங்கி வைத்தனர்.ONGC குடியிருப்பு வளாகத்தில் இருந்து தொடங்கிய பேரணி, காரைக்கால் கடற்கரையை நோக்கி நடைபெற்றது. பங்கேற்பாளர்கள் உற்சாகத்துடனும் விளையாட்டு ஆர்வத்துடனும் சைக்கிளில் பயணம் மேற்கொண்டனர்.இந்தியாவின் புகழ்பெற்ற ஹாக்கி வீரர் மேஜர் தியான் சந்த் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 29-ஆம் தேதி தேசிய விளையாட்டு தினம் கொண்டாடப்படுகிறது. இந்திய ஹாக்கிக்கு மேஜர் தியான் சந்த் ஆற்றிய அளப்பரிய பங்களிப்பையும், அவரது சாதனைகளையும் நினைவுகூரும் வகையிலும் இந்த சைக்கிள் பேரணி நடைபெற்றது.உடற்தகுதி என்பது தனிநபரின் பொறுப்பு மட்டுமல்ல, சமூகத்தின் ஒட்டுமொத்த ஆரோக்கியத்துடன் தொடர்புடையது என்ற விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் பேரணி அமைந்தது.உடற்தகுதி, ஒற்றுமை மற்றும் விளையாட்டு உணர்வை வலியுறுத்திய இந்த சைக்கிள் பேரணி, காரைக்காலில் சிறப்பாக நிறைவடைந்தது. ஆரோக்கியமான மற்றும் சுறுசுறுப்பான சமூகத்தை உருவாக்கும் நோக்கில் ONGC மேற்கொண்ட இந்த சமூகநல முன்னெடுப்பு பொதுமக்களிடையே வரவேற்பை பெற்றது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Must Read