கரூர் மாவட்டம் முழுவதும் உள்ள ஏழை, எளிய மற்றும் நடுத்தர மக்கள் வறுமையின் காரணமாக தனது வாழ்வாதார அவசிய தேவைக்கு வேறு வழியின்றி வட்டிக்கு பணம் வாங்குகின்றனர்; இந்த சூழலை பயன்படுத்தி கந்து வட்டி கும்பல் இது போன்ற மக்களை குறிவைத்து நாங்கள் உங்களுக்கு உதவுகிறோம் என்று கூறி கடன் கொடுக்கின்றனர், ஆனால் கொடுத்த கடனை விட பல மடங்கு அதிகமாக வட்டிக்கு மேல் வட்டி (கந்து வட்டி) வசூல் செய்கின்றனர், மேலும் வறுமையின் காரணமாக அவர்களால் கடனை திருப்பித் தர தாமதமானால் அவர்களிடம் கந்து வட்டி கும்பல் மிகவும் தகாத முறையில் கடுமையாக நடந்து கொள்கின்றனர், மேலும் பெண்களுக்கு பாலியல் ரீதியான துன்பங்களையும் கொடுக்கின்றனர்; இது சம்பந்தமாக பாதிக்கப்பட்டவர்கள் காவல்துறையிடம் புகார் அளித்தும், எந்த நடவடிக்கையும் எடுக்கப்படுவதில்லை, இதனால் பாதிப்புக்குள்ளான மக்கள் மன உளைச்சல் ஏற்பட்டு, தற்கொலைக்கும் தூன்பப்படுகின்றனர், இதில் பல உயிர்களும் பறிபோகியுள்ளது, எனவே தமிழக அரசு 2003-கந்து வட்டி தடுப்புச் சட்டத்தை வலுப்படுத்தி, கந்து வட்டி கும்பல்களிடம் இருந்து மக்களை பாதுகாக்க வேண்டும், மேலும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உரிய இழப்பீடுகளையும் வழங்கிட வேண்டும் என கரூர் மாவட்ட SDPI-கட்சியின் சார்பாக வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறோம்.
-முகமது அலி ஜின்னா
மாவட்ட தலைவர்
சோசியல் டெமாக்ரடிக் பார்ட்டி ஆப் இந்தியா (SDPI-கட்சி)
கரூர் மாவட்டம்.


