Close Menu

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    What's Hot

    சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே அரசுப் பள்ளி ஆசிரியை ஒருவர் பள்ளி வளாகத்திலேயே வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

    April 14, 2026

    மீண்டும் மீண்டுமா…, தவெகவுக்கு பதிலாக பாஜக வேட்பாளருக்கு வாக்கு கேட்ட விஜய்..!

    April 5, 2026

    போட்டியில் இருந்து விலகுகிறேன்’ -திருமாவளவன் எடுத்த அதிரடி முடிவு

    April 5, 2026
    Facebook X (Twitter) Instagram
    • Home
    • இந்தியா
    • தமிழ்நாடு
    • மாவட்ட செய்திகள்
    • உலகம் செய்திகள்
    • விளையாட்டு
    Facebook X (Twitter) Instagram
    Home » பா.ஜ.க.வுடன் கைகோர்த்த நிதிஷ் குமார்; பிரசாந்த் கிஷோர் கூறுவது என்ன…?
    இந்தியா

    பா.ஜ.க.வுடன் கைகோர்த்த நிதிஷ் குமார்; பிரசாந்த் கிஷோர் கூறுவது என்ன…?

    adminBy adminJanuary 29, 2024No Comments2 Mins Read
    Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    பீகாரில் முதல்-மந்திரி நிதிஷ் குமார் தலைமையில் ஐக்கிய ஜனதா தளம் கட்சி ஆட்சி செய்து வருகிறது. மகாகத்பந்தன் கூட்டணியில் இருந்து வந்த அவரது தலைமையிலான அரசில் தேஜஸ்வி யாதவ் துணை முதல்- மந்திரியானார். இந்த சூழலில், ஆளும் பா.ஜ.க.வுக்கு எதிராக இந்தியா கூட்டணியை ஒருங்கிணைக்கும் பணியில் நிதிஷ் ஈடுபட்டு வந்த நிலையில், பீகார் அரசியலில் திடீர் திருப்பம் ஏற்பட்டது.

    சமீபத்தில் 2 நாட்களுக்கு முன் நிதிஷ், பீகார் கவர்னர் அர்லேகரை சந்தித்தது பரபரப்பாக பார்க்கப்பட்டது. இந்நிலையில், முதல்-மந்திரி பதவி ராஜினாமா, மகாகத்பந்தன் கூட்டணியில் இருந்து விலகல் என பீகார் அரசியல் நேற்று பரபரப்பு அடைந்தது.

    எனினும், பா.ஜ.க. ஆதரவுடன் நிதிஷ் குமார் மீண்டும் முதல்-மந்திரியாக நேற்று (ஞாயிற்று கிழமை) பொறுப்பேற்று கொண்டார். பீகாரின் முதல்-மந்திரியாக 9-வது முறையாக நிதிஷ் குமார் பொறுப்பேற்று கொண்டார். இந்த நிகழ்ச்சி நேற்று மாலை 5 மணியளவில் நடந்தது.

    சாம்ராட் சவுத்ரி மற்றும் விஜய் சின்ஹா ஆகிய 2 பேரும் துணை முதல்- மந்திரிகளாக பொறுப்பேற்று கொண்டனர். 6 பேர் கேபினட் மந்திரிகளாக பதவியேற்று கொண்டனர்.

    பா.ஜ.க. மற்றும் ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் இந்த புதிய கூட்டணி பற்றி தேர்தல் வியூக நிபுணரான பிரசாந்த் கிஷோர் தன்னுடைய கணிப்புகளை வெளியிட்டு உள்ளார். அவர் கூறும்போது, 2025 பீகார் சட்டசபை தேர்தல் வரை இந்த புதிய கூட்டணி நீடிக்காது.

    இந்த கூட்டணி அரசானது ஓராண்டு அல்லது அதற்கு குறைவான காலத்திற்கே நீடிக்கும் என்ற ரீதியில் கூறியுள்ளார். நிதிஷ் குமார், தேசிய ஜனநாயக கூட்டணியின் முகம் ஆகவும் மற்றும் பா.ஜ.க.வின் ஆதரவுடன் உருவாகியுள்ள இந்த கூட்டணியானது, பீகார் சட்டசபை தேர்தல் வரை நீடிக்காது. இதனை உங்களுக்கு நான் எழுதி கூட தர முடியும் என்று கூறியுள்ளார். மக்களவை தேர்தலுக்கு பின் 6 மாதங்களில் இந்த மாற்றம் நடக்கும். நான் கூறுவனவற்றை குறித்து வைத்து கொள்ளுங்கள் என்று அவர் கூறியுள்ளார்.

    மகாகத்பந்தன் கூட்டணி சரியாக இல்லை. அதனால் அதில் இருந்து விலக நேரிட்டது. கட்சி தொண்டர்கள் உள்பட ஒவ்வொரு பகுதியிலிருந்தும் எனக்கு ஆலோசனைகள் வந்து கொண்டிருக்கின்றன.

    அவை எல்லாவற்றையும் கவனித்தே இந்த முடிவுக்கு வந்தேன். நான் வெளியேற வேண்டிய சூழல் காணப்பட்டது என்று கவர்னர் அர்லேகரிடம் பதவி விலகல் கடிதம் கொடுத்த பின்னர் நிருபர்களிடம் பேசிய நிதிஷ் குமார் கூறியுள்ளார்.

    Post Views: 281
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    admin
    • Website

    Related Posts

    போட்டியில் இருந்து விலகுகிறேன்’ -திருமாவளவன் எடுத்த அதிரடி முடிவு

    April 5, 2026

    திருச்செந்தூர்: வாக்கு சேகரிக்கச்சென்ற அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனுக்கு பொதுமக்கள் எதிர்ப்பு

    April 5, 2026

    இன்ஸ்டாகிராம் பழக்கம்: கல்லூரி மாணவி பாலியல் வன்கொடுமை

    March 22, 2026
    Add A Comment

    Comments are closed.

    Top Selling Multipurpose WP Theme
    Categories
    • இந்தியா (1,067)
    • உலகம் செய்திகள் (24)
    • கல்வி – வேலை வாய்ப்பு (5)
    • சினிமா (13)
    • தமிழ்நாடு (182)
    • தொழில்நுட்பம் (5)
    • மாவட்ட செய்திகள் (281)
    • விளையாட்டு (22)
    Editors Picks
    Top Reviews
    Advertisement
    Demo
    Facebook X (Twitter) Instagram Pinterest Vimeo YouTube
    • Home
    • Buy Now
    © 2026 Kalaamkural. Designed by Focus Web Solutions.

    Type above and press Enter to search. Press Esc to cancel.