தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு தேனி மாவட்டம் உத்தமபாளையம் ஒன்றியம் ராயப்பன்பட்டி ஊராட்சிக்குட்பட்ட கிராம பொதுப்பக்கள் 50க்கும் மேற்பட்டவர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கோரிக்கை மனுவினை வழங்கினார்கள். இந்த மனுவில் ராயப்பன்பட்டி கிராமத்தில் 12 ஆயிரத்துக்கு மேற்பட்ட மக்கள் தொகை உள்ள கிராமமாக இருந்து வருகிறது என்றும் ,தங்கள் கிராமத்தில் மூன்று மேல்நிலை பள்ளிகள் மற்றும் ஒரு கல்லூரி செயல்பட்டு வருகிறது என்றும், பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு கல்லூரியில் படிக்கும் மாணவர்களை பார்ப்பதற்காக விடுமுறை நாளிலும் பெற்றோர்கள் அதிக அளவில் ராயப்பன்பட்டிக்கு வந்து செல்லும் இடமாகவும், பேருந்து நிறுத்தம் மருத்துவமனை மற்றும் காவல் நிலையத்துக்கு தினசரி பொதுமக்கள் அதிகளவு வருகை புரியும் இடமாகவும் ராயப்பன்பட்டி கிராமம் திகழ்கிறது என்றும் ,இந்த கிராமத்தில் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக 26 1 2024 அன்று குடியரசு தினத்தை முன்னிட்டு ராயப்பன்பட்டி ஊராட்சியில் சுகாதார வளாகம் கட்டுவதற்காக புதிய பூமி பூஜை தொடங்கப்பட்டு பணிகள் நடைபெற்று வந்த நிலையில் தற்போது இந்த பணிகள் அனைத்தும் திடீரென நிறுத்தப்பட்டுள்ளது என்றும், இது சம்பந்தமாக ஊராட்சி நிர்வாகத்தில் கோரிக்கை வைத்த போது எவ்வித பதிலும் வரவில்லை என்றும் இதனால் இந்த கிராமத்தில் அதிக மக்கள் வருகை புரியும் இடமாக திகழ்வதால் சுகாதார வளாகம் கட்டுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ராயப்பன்பட்டி கிராம பொதுமக்கள் சார்பாக மனு அளிக்கப்பட்டது
Subscribe to Updates
Get the latest creative news from FooBar about art, design and business.
Related Posts
Add A Comment


