Close Menu

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    What's Hot

    தஞ்சாவூர் புதிய மாவட்ட வருவாய் அலுவலருக்கு விவசாயிகள் சங்கம் வாழ்த்து

    July 30, 2026

    சோளிங்கர் எம்.எல்.ஏ. மீது நடவடிக்கை எடுக்ககோரி கண்டன ஆர்ப்பாட்டம்

    July 30, 2026

    கும்பகோணம் சார் ஆட்சியர் அலுவலகத்தில் மாங்காய் உடைத்து விவசாயிகள் போராட்டம்

    July 29, 2026
    Facebook X (Twitter) Instagram
    • Home
    • இந்தியா
    • தமிழ்நாடு
    • மாவட்ட செய்திகள்
    • உலகம் செய்திகள்
    • விளையாட்டு
    Facebook X (Twitter) Instagram
    Home » மதச்சார்பின்மைக்கு சாவுமணி.. ராமர் கோவில் திறப்பு விழாவை கடுமையாக விமர்சித்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்
    இந்தியா

    மதச்சார்பின்மைக்கு சாவுமணி.. ராமர் கோவில் திறப்பு விழாவை கடுமையாக விமர்சித்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்

    adminBy adminJanuary 30, 2024No Comments1 Min Read
    Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக் குழு கூட்டம், திருவனந்தபுரத்தில் மூன்று நாட்கள் நடைபெற்றது. இக்கூட்டம் இன்று நிறைவடைந்ததையடுத்து அறிக்கை வெளியிடப்பட்டது. அதில்

    கூறியிருப்பதாவது:-

    ஜனவரி 22-ம் தேதி அயோத்தியில் நடைபெற்ற கோவில் திறப்பு விழா, மதச்சார்பின்மைக்கு சாவுமணி அடித்திருக்கிறது. அரசு, நிர்வாகம் மற்றும் அரசியலுக்கு அப்பாற்பட்டதாக மதம் இருக்கவேண்டும் என்பதே மதச்சார்பின்மை. ஆனால், பிரதமர், உத்தர பிரதேச முதல்-மந்திரி, உத்தர பிரதேச கவர்னர் மற்றும் முழு அரசு இயந்திரம் சம்பந்தப்பட்ட அரசு நிகழ்ச்சியாகவே ராமர் கோவில் விழா நடத்தப்பட்டது.

    எனவே, ஒட்டுமொத்த விழாவும், இந்திய ஆட்சியின் அடிப்படைக் கோட்பாட்டை நேரடியாக மீறிய செயலாகும். அதாவது அரசியலமைப்பின் கீழ் அரசுக்கு எந்த மத சார்பும் அல்லது முன்னுரிமையும் இருக்கக்கூடாது.

    மேலும், இது அரசியல் மற்றும் தேர்தல் ஆதாயங்களை நோக்கமாக கொண்ட நிகழ்வாகும். ராமர் கோவில் கும்பாபிஷேக விழாவையொட்டி ஆர்.எஸ்.எஸ். மற்றும் பா.ஜ.க.வினர் நாடு முழுவதும் பிரசாரம் மேற்கொண்டனர்.

    விழா நிகழ்வுகளை பொது இடங்களில் பெரிய திரைகளில் நேரலையாக ஒளிபரப்பு செய்தனர். கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை விடப்பட்டது. மத்திய அரசு ஊழியர்கள் விழாவில் பங்கேற்கும் வ்கையில், மத்திய அரசு அலுவலகங்கள் அனைத்தும் அன்றைய தினம் பிற்பகல் 2.30 மணிவரை மூடப்பட்டன.

    ஒவ்வொரு மாநிலம் மற்றும் ஒவ்வொரு நாடாளுமன்றத் தொகுதியில் இருந்தும் கோவிலுக்கு செல்வதற்காக மக்களை திரட்ட திட்டமிடப்பட்டுள்ளது. இது மார்ச் மாதம் வரை, அதாவது தேர்தலுக்கு முன்புவரை வரை இதனை செய்ய உள்ளனர்.

    அயோத்தி தவிர அனைத்து மத வழிபாட்டு தலங்களின் நிலை, சுதந்திரத்திற்கு முன்பு இருந்ததைப் போலவே இருக்க வகை செய்யும் வழிபாட்டுத் தலங்கள் சட்டம்-1991, இனி கிடப்பில் போடப்படும் என்பதை ராமர் கோவில் நிகழ்வு காட்டுகிறது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    Post Views: 276
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    admin
    • Website

    Related Posts

    நந்தன் நிலேகனி தலைமையில் தேர்வு சீர்திருத்தங்களுக்கான உயர்மட்டக் குழு:

    July 26, 2026

    மோடி செய்தியாளர்கள் சந்திப்பு

    July 20, 2026

    மம்தாவுக்கு ஆதரவாக எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு..!

    July 20, 2026
    Add A Comment

    Comments are closed.

    Top Selling Multipurpose WP Theme
    Categories
    • இந்தியா (1,077)
    • உலகம் செய்திகள் (24)
    • கல்வி – வேலை வாய்ப்பு (6)
    • சினிமா (13)
    • தமிழ்நாடு (250)
    • தொழில்நுட்பம் (5)
    • மாவட்ட செய்திகள் (387)
    • விளையாட்டு (22)
    Editors Picks
    Top Reviews
    Advertisement
    Demo
    Facebook X (Twitter) Instagram Pinterest Vimeo YouTube
    • Home
    • Buy Now
    © 2026 Kalaamkural. Designed by Focus Web Solutions.

    Type above and press Enter to search. Press Esc to cancel.