தூத்துக்குடி வருகை தந்த தமிழக ஆளுநருக்கு மாவட்ட ஆட்சியர் புத்தகம் வழங்கி வரவேற்பு அளித்தார்.
நெல்லையில் நடைபெறும் மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக் கழக பட்டமளிப்பு விழாவில் கலந்து கொள்வதற்காக தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி இன்று விமானம் மூலம் தூத்துக்குடிக்கு வருகை தந்தார். தூத்துக்குடி வாகைகுளம் விமான நிலையத்தில் ஆளுநருக்கு மாவட்ட ஆட்சித் தலைவர் கோ.லட்சுமிபதி, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் ஆகியோர் புத்தகம் வழங்கி வரவேற்றனர்.

