Close Menu

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    What's Hot

    சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே அரசுப் பள்ளி ஆசிரியை ஒருவர் பள்ளி வளாகத்திலேயே வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

    April 14, 2026

    மீண்டும் மீண்டுமா…, தவெகவுக்கு பதிலாக பாஜக வேட்பாளருக்கு வாக்கு கேட்ட விஜய்..!

    April 5, 2026

    போட்டியில் இருந்து விலகுகிறேன்’ -திருமாவளவன் எடுத்த அதிரடி முடிவு

    April 5, 2026
    Facebook X (Twitter) Instagram
    • Home
    • இந்தியா
    • தமிழ்நாடு
    • மாவட்ட செய்திகள்
    • உலகம் செய்திகள்
    • விளையாட்டு
    Facebook X (Twitter) Instagram
    Home » தஞ்சையைச் சேர்ந்த 14 வயது சிறுமி தீக்காயங்கள், சிகரெட்டால் சுட்ட காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்ட நிலையில், வீட்டின் உரிமையாளர், அவரது மனைவி உட்பட 6 பேர் கைது செய்யப்பட்டனர்.
    இந்தியா

    தஞ்சையைச் சேர்ந்த 14 வயது சிறுமி தீக்காயங்கள், சிகரெட்டால் சுட்ட காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்ட நிலையில், வீட்டின் உரிமையாளர், அவரது மனைவி உட்பட 6 பேர் கைது செய்யப்பட்டனர்.

    SahabudeenBy SahabudeenNovember 3, 2024No Comments2 Mins Read
    Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    சென்னை, அமைந்தகரை, மேத்தா நகர் பகுதியைச் சேர்ந்த சர்புதீன் என்பவர் கடந்த 1-ம் தேதி கே-3 அமைந்தகரை காவல் நிலையத்தில் 14 வயது சிறுமி இறந்து போனது தொடர்பாக கொடுத்த புகாரின் பேரில் போலீசார் சந்தேக மரணம் பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.

    போலீசாரின் விசாரணையில் இறந்து போனவர் 14 வயது சிறுமி என்பதும் அவரது சொந்த ஊர் தஞ்சாவூர் மாவட்டம் என்பதும், சிறுமி கடந்த டிசம்பர் மாதம் 2023- ம் ஆண்டு முதல் முகமது நிஷாத் என்பவரின் குழந்தை பராமரிப்பாளராக பணியாற்றி வந்துள்ளார் என்பதும் தெரியவந்தது. மேலும் போலீசாரின் விசாரணையில் இறந்து போன சிறுமியின் உடலில் காயங்கள் இருப்பது தெரியவந்தது.

    எனவே மேற்கண்ட வீட்டில் வசித்த முகமது நிஷாத் மற்றும் அவரது மனைவி நிவேதா (எ) நாசியா, நண்பர்களான லோகேஷ் மற்றும் அவரது மனைவி ஜெயசக்தி, அவர்களது வீட்டு வேலைக்கார பெண்மணி மகேஸ்வரி, முகமது நிஷாத்தின் சகோதரி சீமா பேகம் ஆகியோரிடம் போலீசார் விசாரணை செய்ததில் அவர்கள் கடந்த 3 மாதங்களாக சிறுமியை அடிக்கடி சித்ரவதை செய்தும், சிகரெட்டால் சூடு வைத்தும், துன்புறுத்தியும் வந்துள்ளனர். இந்நிலையில் கடந்த 31.10.2024 அன்று சிறுமியை தாக்கியதில் அவர் இறந்துள்ளது தெரியவந்து

    அதன் பேரில் மேற்கண்ட சந்தேக மரணம் வழக்கானது கொலை வழக்கு மற்றும் போக்சோ சட்டப்பிரிவுகளுக்கு மாற்றம் செய்யப்பட்டு நிவேதா (எ) நாசியா(30), அவரது கணவர் முகமது நிஷாத்(36), லோகேஷ்(26), அவரது மனைவி ஜெயசக்தி(24), கோவிலம்பாக்கத்தைச் சேர்ந்த மகேஸ்வரி(40) மற்றும் முகமது நிஷாத்தின் சகோதரி அடையாரைச் சேர்ந்த சீமா பேகம்(39) ஆகியோர் நேற்று கைது செய்யப்பட்டனர்.

    இந்தநிலையில், கைது செய்யப்பட்ட 6 நபர்களும் சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் போலீசார் இன்று ஆஜர்படுத்தினர். இதனையடுத்து கைது செய்யப்பட்ட தம்பதி உட்பட 6 பேருக்கும் வரும் 16-ம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது. தொடர்ந்து 6 பேரையும் புழல் சிறையில் அடைக்க உத்தரவிடப்பட்டது. நீதிமன்ற உத்தரவுப்படி 6 பேரும் புழல் சிறையில் அடைக்கப்பட்டனர்.

    Post Views: 364
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    Sahabudeen

    Related Posts

    போட்டியில் இருந்து விலகுகிறேன்’ -திருமாவளவன் எடுத்த அதிரடி முடிவு

    April 5, 2026

    திருச்செந்தூர்: வாக்கு சேகரிக்கச்சென்ற அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனுக்கு பொதுமக்கள் எதிர்ப்பு

    April 5, 2026

    இன்ஸ்டாகிராம் பழக்கம்: கல்லூரி மாணவி பாலியல் வன்கொடுமை

    March 22, 2026
    Add A Comment

    Comments are closed.

    Top Selling Multipurpose WP Theme
    Categories
    • இந்தியா (1,067)
    • உலகம் செய்திகள் (24)
    • கல்வி – வேலை வாய்ப்பு (5)
    • சினிமா (13)
    • தமிழ்நாடு (182)
    • தொழில்நுட்பம் (5)
    • மாவட்ட செய்திகள் (281)
    • விளையாட்டு (22)
    Editors Picks
    Top Reviews
    Advertisement
    Demo
    Facebook X (Twitter) Instagram Pinterest Vimeo YouTube
    • Home
    • Buy Now
    © 2026 Kalaamkural. Designed by Focus Web Solutions.

    Type above and press Enter to search. Press Esc to cancel.