Homeஇந்தியாஆதரவற்ற பெண்களுக்கு ரூ.50ஆயிரம் நிதி உதவி : அமைச்சர் பி. கீதாஜீவன் தகவல்

ஆதரவற்ற பெண்களுக்கு ரூ.50ஆயிரம் நிதி உதவி : அமைச்சர் பி. கீதாஜீவன் தகவல்

தமிழகத்தில் ஆதரவற்ற பெண்களின் வாழ்வாதார மேம்பாட்டுக்காக தொழில் தொடங்க ரூ.50ஆயிரம் நிதி உதவி வழங்கப்பட இருப்பதாக சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை அமைச்சர் பி. கீதாஜீவன் தெரிவித்தார்.

தூத்துக்குடியில் கைம்பெண்கள் மற்றும் கணவனால் கைவிடப்பட்ட பெண்கள், நலிவுற்ற பெண்கள், ஆதரவற்ற பெண்கள், பேரிளம் பெண்களுக்கான ஒருநாள் விழிப்புணர்வு கருத்தரங்கம் நிகழ்ச்சியை சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் பி.கீதா ஜீவன் குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்து சிறப்புரையாற்றினார்

தூத்துக்குடி அறிஞர் அண்ணா மஹாலில் இன்று (09.11.2024), சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறையின் தமிழ்நாடு கைம்பெண்கள் மற்றும் ஆதரவற்ற மகளிர் நலவாரியம் சார்பில் கைம்பெண்கள் மற்றும் கணவனால் கைவிடப்பட்ட பெண்கள், நலிவுற்ற பெண்கள், ஆதரவற்ற பெண்கள், பேரிளம் பெண்களுக்கான ஒருநாள் விழிப்புணர்வு கருத்தரங்கம் நிகழ்ச்சியை சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் பி.கீதா ஜீவன் , மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத், தலைமையில் குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்து சிறப்புரையாற்றினார்.

Must Read

spot_img