நாசரேத் மர்காஷிஸ் கல்லூரியில் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம்
நாசரேத் மர்காஷிஸ் கல்லூரியில் வருகின்ற ஜுன் 19 ந் தேதி வெள்ளிக்கிழமை அன்று கல்லூரி வேலை வாய்ப்பு மற்றும் பயிற்சி துறையின் சார்பாக, வளாக நோ்காணல் நடைபெற உள்ளது.இந்த வளாக நோ்காணலில், திருநெல்வேலி கங்கைகொண்டான் சிறப்பு பொருளாதார மண்டலத்தில் அமைந்துள்ள டாடா பவர் சோலார் நிறுவனத்தில் பணிபுரிய பி.எஸ்சி. கணிதவியல், இயற்பியல், வேதியியல், கணினி அறிவியல், பி.இ. மற்றும் டிப்ளமோ மின் மற்றும் மின்னணுவியல், இயந்திரவியல், மின்னணுத் தொடர்பியல், கணினி அறிவியல் மற்றும் ஐ.டி.ஐ. படிப்புகளில் உள்ள அனைத்து துறைச் சார்ந்த 18 முதல் 30 வயதுக்குட்பட்ட தகுதியான பெண்கள் தோ்ந்தெடுக்கப்பட உள்ளார்கள்.இந்த வளாக நேர்காணலில் எழுத்துத் தோ்வு மற்றும் நேர்முகத் தோ்வு மூலம் பணிக்குத் தேர்ந்தெடுக்கப்படும் பெண்களுக்கு தகுதிக்கேற்ப ரூ. 12500 முதல் ரூ. 17000 வரை சம்பளம் வழங்கப்படும் என கூறப்பட்டுள்ளது.இதற்கான ஏற்பாடுகளை நாசரேத் மர்காஷிஸ் கல்லூரிச் செயலர் எஸ்டிகே ராஜன் மற்றும் கல்லூரி முதல்வர் பென்னிசன் திலகர் கிறிஸ்துதாஸ் தலைமையில் கல்லூரி வேலைவாய்ப்புத் துறையின் ஒருங்கிணைப்பாளர் ஆரோக்கிய அமுதன், கல்லூரி பேராசிரியர்கள் மற்றும் அலுவலர்கள் செய்து வருகின்றனர்.

