உலக உழவர் தினம்: அம்மாபேட்டையில்தவெக சார்பில் 300 தென்னங்கன்றுகள் வழங்கல்
தஞ்சாவூர் மாவட்டம்:உலக உழவர் தினத்தை முன்னிட்டு அம்மாபேட்டையில் வடக்கு மாவட்ட மத்திய ஒன்றிய கழகம் தவெக சார்பில் 300க்கும் மேற்பட்ட பொதுமக்களுக்கு தென்னங்கன்றுகள் மரக்கன்றுகள் மற்றும் 200க்கும் மேற்பட்டோருக்கு விலையில்லா காய்கறி விதைகள் வழங்கும் விழா நிகழ்ச்சி கழக நிர்வாகி ஜி.கே. பாண்டியன் ஏற்பாட்டில் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் தஞ்சை வடக்கு மாவட்ட செயலாளர் நிஜாம் அலி தலைமை தாங்கினார் ஒன்றிய கழக செயலாளர் ஒருங்கிணைந்த ஒன்றிய பொறுப்பாளர் டாக்டர் டி ஆர் எம் சசி முன்னிலை வகித்தார் இதில் பேரூர் கழக செயலாளர் சுடலைமுத்து மாவட்ட தொண்டரணி அமைப்பாளர் மணிகண்டன் ,சாலி பிரபு மாவட்ட மகளிர் அணி அமைப்பாளர் ஜெயமணி கிஷோர் மத்திய ஒன்றிய இளம்பெண்கள் பாசறை அமைப்பாளர் புனிதவேனி ஈஸ்வரன் வடக்கு மாவட்ட மாணவர் அணி அமைப்பாளர் .
கோகுல்வாணன் தெற்கு ஒன்றிய செயலாளர் சுதாகர், கிழக்கு ஒன்றிய இணைச் செயலாளர் ராஜேஷ், மத்திய ஒன்றிய விவசாய அணி அமைப்பாளர் புன்னியமூர்த்தி, ஒன்றிய தொழிலாளர் அணி அமைப்பாளர் மதன் தன்னார், ஒன்றிய அமைப்பாளர் குணராஜ், ஒன்றிய மாணவரணி அமைப்பாளர் கண்ணன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
