தூத்துக்குடி நாசரேத் திருமண்டலத்தின் சார்பில் நாசரேத் மர்காசீஸ் நகரில் இயங்கி வரும் ஜெயராஜ் அன்னபாக்கியம் சி எஸ் ஐ பாலிடெக்னிக் கல்லூரியில் ரத்த வகை கண்டறிதல் முகாம் நாட்டு நலப்பணி திட்டத்தின் மூலம் சிறப்பாக நடைபெற்றது. இந்த முகாமை கல்லூரி முதல்வர் முனைவர் கோயில் ராஜ் ஞானதாசன் தலைமை தாங்கி துவக்கி வைத்தார். சிவில் துறை தலைவர் ரஞ்சன் ஆரம்ப ஜெபம் செய்தார். தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி ரத்த வங்கி ஊழியர்கள்.முகாமை சிறப்பாக நடத்தினர். இதற்கான ஏற்பாடுகளை கல்லூரி தாளாளர் மற்றும் தூத்துக்குடி நாசரேத் திருமண்டல செயற்குழு உறுப்பினர், தொழிலதிபர்திரு. அருள் ராஜா அவர்கள் தலைமையில் முதல்வர் கோயில் ராஜ் ஞான தாசன், நாட்டு நலப்பணி திட்ட அலுவலர்கள் லிவிங்ஸ்டன் நவராஜ், ஜோசப் பர்னபாஸ், ஆசிரியர்கள் மற்றும் நாட்டு நலப்பணி திட்ட மாணவர்கள் சிறப்பாக செய்திருந்தனர்.
