திருச்சி மகாத்மா காந்தி அரசு மருத்துவமனையின் பெண்கள் வார்டில் பெண் ஒருவரின் கால் விரலை எலி கடித்ததால் அவர் ஐ.சி.யுவுக்கு மாற்றப்பட்ட நிலையில், ஐ.சி.யுவிலும் எலிகள் நடமாடும் வீடியோ வெளியாகியுள்ளது.
நேற்று எலி கடித்த செய்திகள் வெளியானதும் மருத்துவமனை வளாகத்தைத் தூய்மைப் படுத்தும் பணி மேற்கொள்ளப்பட்டது.இந்த நிலையில்தான் உயிர்காக்கும் கருவிகளுடன், அதீத தூய்மையுடன் பராமரிக்கப்பட வேண்டிய ஐ.சி.யுவிலும் எலிகள் நடமாட்டம் உள்ளதாக நோயாளிகள் புகார் தெரிவித்துள்ளனர்.

