செங்கல்பட்டு மாவட்ட அருண் ராஜ் ஆட்சியரை மரியாதை நிமித்தமாக சந்தித்து, அனைத்து மக்கள் சக்தி இயக்கம் சார்பாக பல ஆண்டுகளாக தொடர்ந்து செய்து வரும் மக்கள் நலப்பணிகளின் தொகுப்பை காண்பித்து வாழ்த்துப்பெற்றேன். அதனையடுத்து, இயக்கம் சார்பாக நடைபெற இருக்கும் சத்துமாவு வழங்கும் நிகழ்ச்சிக்கான அழைப்பிதழ் ஆட்சியரிடம் வழங்கினேன். அதனை தொடர்ந்து பிப்ரவரி மாதம் இறுதியில் இயக்கம் சார்பாக நடைபெறும் “ப்ராஜெக்ட் 50” என்ற நிகழ்ச்சிக்கு அழைப்பு விடுத்தேன். அதன் பின்னர் இறுதியாக இயக்கத்தின் நிகழ்ச்சிகளுக்கும், சமூக ஆர்வலர் என்ற முறையில் எனக்கும் தனிப்பட்ட பாதுகாப்பு வழங்க வேண்டியும் மனு அளித்து விடைபெற்றேன்.


