Close Menu

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    What's Hot

    தஞ்சாவூர் புதிய மாவட்ட வருவாய் அலுவலருக்கு விவசாயிகள் சங்கம் வாழ்த்து

    July 30, 2026

    சோளிங்கர் எம்.எல்.ஏ. மீது நடவடிக்கை எடுக்ககோரி கண்டன ஆர்ப்பாட்டம்

    July 30, 2026

    கும்பகோணம் சார் ஆட்சியர் அலுவலகத்தில் மாங்காய் உடைத்து விவசாயிகள் போராட்டம்

    July 29, 2026
    Facebook X (Twitter) Instagram
    • Home
    • இந்தியா
    • தமிழ்நாடு
    • மாவட்ட செய்திகள்
    • உலகம் செய்திகள்
    • விளையாட்டு
    Facebook X (Twitter) Instagram
    Home » போதையில் போலீசை தாக்கிய தாதா; அடுத்து காத்திருந்த அதிர்ச்சி: வைரலாகும் வீடியோ
    இந்தியா

    போதையில் போலீசை தாக்கிய தாதா; அடுத்து காத்திருந்த அதிர்ச்சி: வைரலாகும் வீடியோ

    SahabudeenBy SahabudeenMay 27, 20252 Comments2 Mins Read
    Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    ஆந்திர பிரதேசத்தில் முதல்–மந்திரி சந்திரபாபு நாயுடு தலைமையிலான தெலுங்கு தேச கட்சியின் ஆட்சி நடந்து வருகிறது. இந்நிலையில், கடந்த ஒரு மாதத்திற்கு முன் சிரஞ்சீவி என்ற கான்ஸ்டபிளை அந்த பகுதியை சேர்ந்த தாதா லட்டு என்பவர் மதுபோதையில் தாக்கியுள்ளார். இந்நிலையில், அவரை தேடி வந்த போலீசார், லட்டுவின் கூட்டாளிகளான விக்டர், பாபுலால் மற்றும் ராகேஷ் ஆகிய 3 பேரை கைது செய்தனர்.

    அவர்களை பொது வெளியில் வைத்து போலீசார், லத்தியால் அடித்த வீடியோ வைரலாகி வருகிறது. இந்த வீடியோவை ஒய்.எஸ்.ஆர். கட்சியை சேர்ந்த செய்தி தொடர்பாளர் அம்பத்தி ராம்பாபு எக்ஸ் சமூக ஊடகத்தில் பதிவிட்டு உள்ளார்.

    அந்த வீடியோவில் போலீஸ்காரர், 3 பேரில் ஒருவரின் காலில் முதலில் மெதுவாக அடித்து பரிசோதிக்கிறார். இதன்பின்னர், அந்த நபரின் கால்களில் ஓங்கி அடிக்கிறார். இதனால், வலியால் அந்த நபர் அலறுகிறார். விடாமல் அவர் தொடர்ந்து அடிக்கும் காட்சிகள் காணப்படுகின்றன. 6 முறை அடித்ததும், வலி பொறுக்க முடியாமல் அந்த நபர் கால்களை பின்னுக்கு இழுக்கிறார்.

    போலீசார் சத்தம் போட்டதும் மீண்டும் காலை பழைய நிலைக்கு கொண்டு செல்கிறார். 7-வது முறையும் அடி விழுகிறது. அப்போது, மன்னித்து கொள்ளுங்கள் சார் என் அந்த நபர் கெஞ்சுகிறார். ஆனால், அவரை நேராக அமரும்படி கூறி விட்டு, 3 முறை அடிக்கிறார். இதனால் வலியால் அந்த நபர் அழுகிறார். அவரை நகர்ந்து போக கூறிய பின்பு, மற்றொரு நபருக்கு 10 முறை அடி விழுகிறது. அவரும் போலீசிடம் கெஞ்சுகிறார்.

    கடைசியாக இருந்த நபரை அடிக்க போலீஸ்காரர் தயாரானபோது, மற்றொரு நபர் புதிய லத்தி ஒன்றை எடுத்து வந்து கொடுக்கிறார். இந்த முறை 3-வது நபர் காலை எடுக்காமல் இருப்பதற்காக போலீஸ்காரர் ஒருவர் அந்நபரின் கால்கள் மீது பூட்ஸ் அணிந்த காலால், அந்த வாலிபரின் கால் மீது வைத்து அழுத்தி பிடித்து கொள்கிறார்.

    தொடர்ந்து லத்தியால் அடி விழுகிறது.

    கடைசியில் அடியை நிறுத்தி, எழுந்து போக கூறியும் அந்த நபர் எழ முடியாமல் அதே இடத்தில் வலியால் அழுதபடி வீடியோவில் காணப்படுகிறார். பொதுவெளியில் 3 பேரை போலீசார் லத்தியால் அடிக்கும் வீடியோ வைரலாகி வருகிறது.

    இதுபற்றி ராம்பாபு வெளியிட்ட செய்தியில், நீங்கள் தவறு செய்திருந்தபோதும் கூட, உங்களை அடிக்கும் உரிமை அவர்களுக்கு கிடையாது. குடிமக்களின் உரிமைகள் இல்லாத பாபுவின் ஆட்சியிது. நீதிக்காக போராட செல்வோம் என்று அந்த பதிவில் தெரிவித்து உள்ளார்.

    Post Views: 788
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    Sahabudeen

    Related Posts

    நந்தன் நிலேகனி தலைமையில் தேர்வு சீர்திருத்தங்களுக்கான உயர்மட்டக் குழு:

    July 26, 2026

    மோடி செய்தியாளர்கள் சந்திப்பு

    July 20, 2026

    மம்தாவுக்கு ஆதரவாக எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு..!

    July 20, 2026
    View 2 Comments

    2 Comments

    1. Gurunathan. M on May 28, 2025 12:21 pm

      Iam joint

    2. Gurunathan. M on May 28, 2025 12:22 pm

      Good

    Top Selling Multipurpose WP Theme
    Categories
    • இந்தியா (1,077)
    • உலகம் செய்திகள் (24)
    • கல்வி – வேலை வாய்ப்பு (6)
    • சினிமா (13)
    • தமிழ்நாடு (250)
    • தொழில்நுட்பம் (5)
    • மாவட்ட செய்திகள் (387)
    • விளையாட்டு (22)
    Editors Picks
    Top Reviews
    Advertisement
    Demo
    Facebook X (Twitter) Instagram Pinterest Vimeo YouTube
    • Home
    • Buy Now
    © 2026 Kalaamkural. Designed by Focus Web Solutions.

    Type above and press Enter to search. Press Esc to cancel.