மக்கள் எழுச்சி ஜனநாயக கட்சி மாநில தலைவர் காயல் அப்பாஸ் வெளியிட்டுள்ள நியமன செய்தியில் கூறியிருப்பதாவது.
மக்கள் எழுச்சி ஜனநாயக கட்சியின் விதி முறைகளின் படியும் எனக்குள் அதிகாரத்தின் கீழ் மாநில பொது செயலாளர் எஸ்.ஷாஜகான் பரிந்துரையின் படி சென்னை. எம்.ஜு.ஆர் நகரை சேர்ந்த ராஜா மணி என்பவர் மாநில தொழிலாளர் அணி துனை செயலாளராக இன்று முதல் நியமிக்க பட்டு உள்ளார் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்து கொள்கிறேன்.
மக்கள் எழுச்சி ஜனநாயக கட்சியின் விதி முறைகளுக்கு கட்டு பட்டு கட்சியின் வளர்ச்சிக்காக அயராமல் பாடுபட வேண்டும் தாங்கள் பதவியின் தன்மையை உணர்ந்து இறையாண்மைக்கு உட்பட்டு அனைத்து சமூக மக்கள் நலனுக்காக பாடு பட வேண்டும் என கேட்டு கொள்கிறேன் .
மக்கள் எழுச்சி ஜனநாயக கட்சியின் மாநில தொழிலாளர் அணி துனை செயலாளராக நியமிக்க பட்டு உள்ள ராஜாமணிக்கு நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் முழு ஓத்துழைப்பு நல்குமாறு கேட்டு கொள்கிறேன். இவ்வாறு காயல் அப்பாஸ் கூறியுள்ளார்.
தேதி 21-03-2024


