சேலம் மாவட்டம் ஓமலூர் அடுத்த காடையாம்பட்டி யூனியன் அலுவலகம் அருகே உள்ள எம் ஜி ஆர் திருவுருவ சிலைக்கு அதிமுகவின் ஓமலூர் சட்டமன்ற உறுப்பினர் ஆர்.மணி மற்றும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் சி.பல்பாக்கி கிருஷ்ணன் ஆகியோர் தலைமையில் எம்ஜிஆர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
இதில் நூற்றுக்கும் மேற்பட்ட கட்சி நிர்வாகிகள் தொண்டர்கள் கலந்து கொண்டன.
இதனைத் தொடர்ந்து கட்சிக் கொடியேற்றி மரியாதை செலுத்தி பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினர்.
நிகழ்ச்சியில் காடையாம்பட்டி ஒன்றிய செயலாளர் சித்தேஸ்வரன் , சுப்பிரமணி மற்றும் காடையாம்பட்டி பேரூராட்சி செயலாளர் எஸ்.ஆனந்த குமார், ஆகிய பலர் கலந்து கொண்டனர்.


