Author: admin

உத்தர பிரதேச மாநிலம் வாரணாசியில் காசி விசுவநாதர் கோவிலுக்கு அருகே ஞானவாபி மசூதி அமைந்துள்ளது. அந்த மசூதி, கோவிலை இடித்துக் கட்டப்பட்டிருப்பதாகவும், அதை மீண்டும் இந்துக்களிடம் வழிபாட்டுக்காக ஒப்படைக்க வேண்டும் என்றும் வாரணாசி கோர்ட்டு மற்றும் அலகாபாத் ஐகோர்ட்டில் வழக்குகள் தொடரப்பட்டுள்ளன. இதை எதிர்த்து இஸ்லாமியர்கள் தரப்பில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. மசூதி இருக்கும் இடம் கோவிலின் ஒரு பகுதி என்று இந்துக்கள் தரப்பில் வாதம் முன்வைக்கப்படுகிறது. இந்தநிலையில், வாரணாசியில் உள்ள ஞானவாபி மசூதியின் தெற்கு பகுதியில் இந்துக்கள் பூஜை நடத்த வாரணாசி கோர்ட்டு அனுமதி வழங்கி உள்ளது வழிபாடு நடத்துவதற்கான பூசாரியை நியமிக்கவும் காசி விஸ்வநாதர் கோவில் அறக்கட்டளைக்கு கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. இந்துக்கள் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் அடுத்த 7 நாட்களுக்குள் பூஜை நடத்தப்படும் என கோர்ட்டில் தகவல் தெரிவித்துள்ளார். இந்த உத்தரவை எதிர்த்து மேல்முறையீடு செய்யப்போவதாக ஞானவாபி மசூதி நிர்வாகம் தெரிவித்துள்ளது. இந்த நிலையில் ஞானவாபி மசூதி வழக்கில்…

Read More

மதுரை அண்ணாநகரைச் சேர்ந்த வழக்கறிஞர் முத்துக்குமார் என்பவர், மதுரை ஐகோர்ட்டு கிளையில் கடந்த 2011-ல் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில், “மதுரை மீனாட்சியம்மன் கோவிலை சுற்றியுள்ள கட்டிடங்களின் உயரத்தை கட்டுப்படுத்த நகராட்சி நிர்வாகத்துறை கடந்த 30.1.1997-ல் அரசாணை வெளியிட்டது. அதன்படி கோவிலைச் சுற்றியுள்ள பகுதிகளில் 9 மீட்டருக்கு மேல் கட்டிடங்களின் கட்டிடங்கள் கட்டக்கூடாது. ஆனால் இந்த விதியை மீறி 9 மீட்டருக்கு மேல் ஏராளமான கட்டிடங்கள் கட்டப்பட்டுள்ளன. இந்த விதிமீறல் கட்டிடங்கள் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்” என்று மனுதாரர் தெரிவித்திருந்தார். இந்த மனு ஏற்கனவே விசாரணைக்கு வந்தபோது, மீனாட்சியம்மன் கோவில் பகுதியில் உள்ள விதிமீறல் கட்டிடங்கள் குறித்து வழக்கறிஞர்கள் ஆணையர்கள் ஆய்வு செய்து செய்து அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் என கோர்ட்டு உத்தரவிட்டது. அதன்படி வழக்கறிஞர்கள் ஆணையர்கள் நேரில் ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்தனர். அதில், மொத்தம் 547 கட்டிடங்களை ஆய்வு செய்ததில், 525…

Read More

கால் வைக்க விடமாட்டோம்: முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதி தமிழ்நாட்டில் குடியுரிமை திருத்தச் சட்டம் நடைமுறைப்படுத்தப்படுவதைத் தி.மு.க. அரசு ஒருபோதும் அனுமதிக்காது என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இது குறித்து தனது எக்ஸ் வலைதள பதிவில் அவர் கூறியுள்ளதாவது, ஏழு நாட்களில் மேற்கு வங்கம் மட்டுமல்லாது இந்தியா முழுவதும் சி.ஏ.ஏ. நடைமுறைப்படுத்தப்படும் என்று கூறியிருக்கிறார் பா.ஜ.க.வைச் சேர்ந்த மத்திய இணை-மந்திரி ஒருவர். இலங்கைத் தமிழர்களுக்கும் இசுலாமியர்களுக்கும் எதிரான குடியுரிமை திருத்த மசோதா, சட்டம் ஆனதற்கு முழுமுதற்காரணமே நாடாளுமன்றத்தில் அ.தி.மு.க. ஆதரித்து வாக்களித்ததுதான். அப்போது எதிர்க்கட்சியாக இருந்தாலும் தோழமை இயக்கங்களுடன் இணைந்து மிகப்பெரிய அளவில் போராட்டங்களை நடத்தியதுடன், இரண்டு கோடி பேரிடம் கையெழுத்து பெற்று அதனை ஜனாதிபதிக்கு அனுப்பி வைத்தது தி.மு.க. 2021-இல் ஆட்சிக்கு வந்த உடனே சி.ஏ.ஏ.வை திரும்பப் பெற வலியுறுத்தி சட்டமன்றத்தில் தீர்மானமே நிறைவேற்றினோம். தமிழ்நாட்டில் குடியுரிமை திருத்தச் சட்டம் நடைமுறைப்படுத்தப்படுவதை தி.மு.க. அரசு ஒருபோதும் அனுமதிக்காது. மதநல்லிணக்கத்துக்கு எதிரான…

Read More

இந்தியா கூட்டணியில் திரிணாமுல் காங்கிரஸ் இடம்பெற்றிருந்தநிலையில் மக்களவை தேர்தலில் மேற்கு வங்கத்தில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தனித்து போட்டியிடும் என்று அக்கட்சியின் தலைவரும் மேற்கு வங்க முதல்-மந்திரியுமான மம்தா பானர்ஜி சமீபத்தில் அறிவித்து இருந்தார். இதனை தொடர்ந்து மக்களவை தேர்தலை முன்னிட்டு அவர் பாத யாத்திரையை மேற்கொண்டுள்ளார். சோப்ரா நகரில் யாத்திரையை மம்தா பானர்ஜி நேற்று மேற்கொண்டார். இதனை தொடர்ந்து இன்று மால்டா பகுதியில் பாத யாத்திரையாக சென்றார். திரிணாமுல் நிர்வாகிகள், தொண்டர்கள் முதல்-மந்திரியை உற்சாகமாக வரவேற்றனர். வழிநெடுக முதல்-மந்திரி மம்தா பானர்ஜிக்கு ஆதரவாக முழக்கமிட்டு ஏராளமான தொண்டர்கள் யாத்திரையில் கலந்து கொண்டனர். பாத யாத்திரை தொடங்கும் முன் அவர் பேசியதாவது:- தேர்தல் நேரத்தில் மட்டுமே குரல் எழுப்புவது சில கட்சிகளின் வாடிக்கையாக உள்ளது. பா.ஜ.க.வை வீழ்த்தும் வலிமையுள்ள கட்சி உள்ளது என்றால் அது திரிணாமுல் காங்கிரஸ்தான். மேற்கு வங்காளத்தில் 2 தொகுதிகளிலும் காங்கிரசை வெற்றி பெறச்செய்ய தயாராக இருந்தேன். கூடுதலாக…

Read More

கேரளாவைச் சேர்ந்த மதச்சார்பற்ற கேரள ஜனபக்சம் கட்சியின் தலைவர் பி.சி.ஜார்ஜ், இன்று தனது கட்சியை பா.ஜ.க.வுடன் இணைத்தார். பி.சி.ஜார்ஜ், அவரது மகன் ஷான் மற்றும் கட்சியின் பிற தலைவர்கள் அனைவரும் டெல்லியில் உள்ள பா.ஜ.க. தலைமையகம் சென்று, கட்சியின் பொறுப்பாளர்கள் பிரகாஷ் ஜவடேகர் மற்றும் மூத்த தலைவர்கள் முன்னிலையில், பா.ஜ.க.வில் இணைந்தனர். அதன்பின்னர் பா.ஜ.க. தேசிய செயலாளர் அனில் அந்தோணி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:- இன்று பி.சி.ஜார்ஜ் தலைமையிலான மதச்சார்பற்ற கேரள ஜனபக்சம் கட்சி பா.ஜ.க.வுடன் இணைந்துள்ளது. 2047- க்குள் இந்தியாவை வளர்ந்த நாடாக மாற்றும் நமது பிரதமர் நரேந்திர மோடியின் தொலைநோக்குப் பார்வை மீதான முழு நம்பிக்கையை இந்த நிகழ்வு காட்டுகிறது. பா.ஜ.க.வுக்கு அவர்களை வரவேற்கிறேன். ஜகபக்சம் கட்சியின் வருகையால் கேரளாவில் பா.ஜ.க. மேலும் வளரும். மேலும், இந்தியாவை வளர்ந்த நாடாக மாற்றும் பிரதமரின் திட்டத்திற்கு பங்களிக்கும். இவ்வாறு அவர் கூறினார். பி.சி. ஜார்ஜ் இதற்கு முன்பு,…

Read More

கந்து வட்டி தொடர்பாக கட்டப்பஞ்சாயத்து பேசியதாக வெளியான ஆடியோ – கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய உதவி ஆய்வாளர் பணியிடை மாற்றம் தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியை சேர்ந்த மினி பஸ் ஊழியர் ஆறுமுக பாண்டி என்பவரிடம் கந்து வட்டி பிரச்சினை தொடர்பாக கட்ட பஞ்சாயத்து செய்ததாக பேசிய ஆடியோ வெளியானதை தொடர்ந்து கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய உதவி ஆய்வாளர் அரிக்கண்ணன் ஆயுதப்படைக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

Read More

நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் பல்வேறு கட்சிகள் கூட்டணி, தொகுதி பங்கீடு உள்பட பல்வேறு விவகாரங்கள் தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றன. அந்த வகையில் தமிழ்நாட்டிலும் நாடாளுமன்ற தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. இந்நிலையில், நாடாளுமன்ற தேர்தலில் கூட்டணி அமைப்பது குறித்து பா.ம.க., தே.மு.தி.க. உடன் அ.தி.மு.க. பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. அ.தி.மு.க. தொகுதி பங்கீட்டு குழுவை சேர்ந்த நிர்வாகிகள் பா.ம.க., தே.மு.தி.க.உடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகின்றனர். பா.ம.க. தே.மு.தி.க. கூட்டணியை , உறுதி செய்யும் பணியில் அ.தி.மு.க. மூத்த தலைவர்கள் கே.பி.முனுசாமி, எஸ்.பி.வேலுமணி, சி.வி. சண்முகம், தங்கமணி பேசி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. நாடாளுமன்ற தேர்தலில் பா.ம.க. தே.மு.தி.க. கேட்கும் தொகுதிகள் எவை? கட்சிகளின் எதிர்பார்ப்பு என்ன? என்பது குறித்து அ.தி.மு.க. கேட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Read More

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று காலை 11 மணிக்கு தொடங்கவுள்ளது. தற்போதைய 17-வது மக்களவையின் கடைசி நாடாளுமன்றக் கூட்டம் இதுவாகும். இந்தநிலையில் டெல்லியில் உள்ள நாடாளுமன்ற வளாகத்தில் பிரதமர் மோடி பேசியதாவது:- ஒவ்வொரு நாளும் முன்னேற்றத்தின் புதிய உச்சங்களைத் தாண்டி நாடு முன்னேறி வருகிறது என்பதில் நான் உறுதியாக இருக்கிறேன். இன்று ஜனாதிபதி உரை, நாளை இடைக்கால பட்ஜெட் தாக்கல் இது மகளிருக்கான சக்தி. நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரை சுமூகமாக நடத்த எதிர்க்கட்சிகள் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும். நாடாளுமன்றத்தில் விவாதங்கள் ஆக்கப்பூர்வமாக இருக்க வேண்டும். கடைசி கூட்டத்தொடர் என்பதால் இதை யாரும் புறக்கணிக்க வேண்டாம். நாடாளுமன்றத்தில் அமளியில் ஈடுபடுவோரை வரலாறு நினைவில் வைத்திருக்காது. மகளிர் இட ஒதுக்கீடு மசோதா நிறைவெற்றப்பட்டது மகத்தான சாதனை. குடியரசு தின விழா அணிவகுப்பில் பெண்களின் வலிமை குறித்து பறைசாற்றப்பட்டுள்ளது. மக்களவைத்தேர்தலுக்குப்பின் பாஜக அரசு மீண்டும் முழு பட்ஜெட்டை தாக்கல் செய்யும். மக்களின் ஆசியுடன் இந்த…

Read More

சென்னை சத்தியமூர்த்தி பவனில், மகாத்மா காந்தியின் 77-வது நினைவு தினம் மற்றும் தியாகிகள் தினத்தையொட்டி, மகாத்மா காந்தி மற்றும் தியாகிகளின் உருவப்படத்திற்கு தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி தலைமையில் மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது. அதைத் தொடர்ந்து தீண்டாமை ஒழிப்பு உறுதிமொழி ஏற்கப்பட்டது. கே.எஸ்.அழகிரி நிருபர்களிடம் கூறியதாவது:- ராமர் கோவிலை கட்டிவிட்டதால் ஆட்சிக்கு வந்துவிடலாம் என்று நினைக்கிறார்கள். கோவில் கட்டியவர்கள் யாரும் வெற்றிபெற்றதாக வரலாறு கிடையாது. அதுவும், நீங்கள் கோவில் வேலை முடியாமலேயே கும்பாபிஷேகம் செய்துள்ளீர்கள். அதனால், 4 சங்கராச்சாரியர்கள் உங்களை எதிர்க்கிறார்கள். ஆர்.என்.ரவி, கவர்னராக வந்த நாள் முதல் இதுவரை தான் சொன்னது எதையும் தப்பு என்று ஒப்புக்கொண்டது கிடையாது. காந்தியின் விவகாரத்தில் முதல் முறையாக தப்பு என்பதை ஒப்புக்கொண்டுள்ளார். இது தான் காந்தியின் சக்தி, காந்தியின் பெருமை. பா.ஜனதா கூட்டணியில் இருந்து ஏன் விலகினோம் என்பதற்கான காரணத்தை அ.தி.மு.க. இதுவரை மக்களிடம் தெரிவிக்கவில்லை. எனவே, பா.ஜனதா அ.தி.மு.க. இடையே…

Read More

அரசின் அனைத்து நலத்திட்டங்களும், சேவைகளும் தங்குதடையின்றி விரைந்து மக்களை சென்றடைவதை உறுதி செய்யும் நோக்கத்தோடு, ‘உங்களைத் தேடி உங்கள் ஊரில்’ என்ற புதிய திட்டத்தை முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 23ம் தேதி அறிவித்தார். இந்த திட்டம் இன்று முதல் அமலுக்கு வர உள்ளது. உங்களைத் தேடி உங்கள் ஊரில்’ திட்ட சென்னை மாவட்டம் நீங்கலாக மற்ற அனைத்து மாவட்டங்களிலும் குறிப்பிட்ட வட்டத்தில் ஒவ்வொரு மாதமும் 4வது புதன்கிழமை அன்று கலெக்டர்கள் தலைமையில் நடைபெறும். இன்று தொடங்கும் ‘உங்களைத் தேடி உங்கள் ஊரில்’ திட்டத்தில் மாவட்ட கலெக்டர்கள் ஏதாவது ஒரு கிராமத்தை தேர்வு செய்து நேரடியாக அந்த கிராமத்துக்கு சென்று 24 மணி நேரம் அங்கு தங்க உள்ளனர். இந்த திட்டத்தின்படி கலெக்டர்கள் இன்றைய தினம் காலை 9 மணி முதல் மறுநாள் காலை 9 மணி வரை கிராமத்தில் தங்கியிருப்பர். அந்த கிராமத்தில் தங்கி இருந்து…

Read More