Author: admin

சென்னையில் இருந்து தென் பகுதிகளுக்கு செல்லும் அனைத்து விரைவு பஸ்கள் உள்பட அரசு பஸ்கள், கிளாம்பாக்கம் பஸ் நிலையத்தில் இருந்து நேற்று புறப்பட்டுச்செல்ல தொடங்கின. இந்த சூழ்நிலையில் கிளாம்பாக்கம் பஸ் நிலையத்தில் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் மற்றும் அரசு விரைவு போக்குவரத்து கழகம் ஆகியவற்றில் பயணம் செய்ய விரும்பும் பஸ் பயணிகளுக்கான நடைமேடை குறித்த வழிகாட்டி வெளியிடப்பட்டுள்ளது. நடைமேடை – 1 கன்னியாகுமரி, செங்கோட்டை, திருச்செந்தூர், நெல்லை, தூத்துக்குடி, நாகர்கோவில், மார்த்தாண்டம். நடைமேடை 2 உடன்குடி, கருங்கல், கன்னியாகுமரி, குட்டம், குலசேகரம், சிவகாசி, செங்கோட்டை, திசையன்விளை, திருச்செந்தூர், தூத்துக்குடி, நெல்லை, திருவனந்தபுரம், நாகர்கோவில், பாபநாசம், மார்த்தாண்டம், ஸ்ரீவில்லிபுத்தூர். நடைமேடை 3 ராமேசுவரம், ஏர்வாடி, தொண்டி, ஒப்பிலன், கமுதி, காரைக்குடி, கீரமங்கலம், சாயல்குடி, சிவகங்கை, தேவகோட்டை, பரமக்குடி, பொன்னமராவதி, மதுரை, வீரசோழன். நடைமேடை – 4 கம்பம், கரூர், குமுளி, கும்பகோணம், தஞ்சாவூர், திண்டுக்கல், திருச்சி, தேனி, பட்டுக்கோட்டை, பேராவூரணி, பொள்ளாச்சி,…

Read More

பாஜக தேனி பாராளுமன்ற தேர்தல் அலுவலகம் திறப்பு விழா தேனி கருவேல்நாயக்கன்பட்டியில், பாரதிய ஜனதா கட்சியின் தேனி பாராளுமன்ற தேர்தல் அலுவலகம் திறப்பு விழா, தேனி மாவட்ட பாஜக தலைவர் பி.சி.பாண்டியன் தலைமையில் நடைபெற்றது. பெருங்கோட்டப் பொறுப்பாளர் கதலி நரசிங்க பெருமாள் , பாராளுமன்ற பார்வையாளர் ரவிபாலா ராஜா, பாராளுமன்ற அமைப்பாளர் ராஜபாண்டியன், பாராளுமன்ற இணை அமைப்பாளர் இராமநாதன் ஆகியோர் கலந்து கொண்டனர். சிறப்பு அழைப்பாளர்களாக மதுரை கிழக்கு மாவட்ட தலைவர் ராஜசிம்மன், மதுரை மேற்கு மாவட்ட தலைவர் சசிகுமார், மற்றும் நிர்வாகிகள் பொறுப்பாளர்கள் திரளாக கலந்து கொண்டனர். பெருங்கோட்ட தலைவர் கதலி நரசிங்க பெருமாள் செய்தியாளர்களை சந்திப்பின் போது : தேனி மாவட்டத்தில் பாரதிய ஜனதா கட்சியில் எந்த விதமான பிரச்சனைகளும் இல்லை. சமூகமாக உள்ளது. வருகின்ற நாடாளுமன்றத் தேர்தலில், தலைமை அறிவிக்கும் வேட்பாளருக்கு ஆதரவு திரட்டும் வகையில் நாங்கள் செயல்படுவோம். தேனி மாவட்டத்தில் பாரதிய ஜனதா கட்சியின் சார்பில்…

Read More

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக் குழு கூட்டம், திருவனந்தபுரத்தில் மூன்று நாட்கள் நடைபெற்றது. இக்கூட்டம் இன்று நிறைவடைந்ததையடுத்து அறிக்கை வெளியிடப்பட்டது. அதில் கூறியிருப்பதாவது:- ஜனவரி 22-ம் தேதி அயோத்தியில் நடைபெற்ற கோவில் திறப்பு விழா, மதச்சார்பின்மைக்கு சாவுமணி அடித்திருக்கிறது. அரசு, நிர்வாகம் மற்றும் அரசியலுக்கு அப்பாற்பட்டதாக மதம் இருக்கவேண்டும் என்பதே மதச்சார்பின்மை. ஆனால், பிரதமர், உத்தர பிரதேச முதல்-மந்திரி, உத்தர பிரதேச கவர்னர் மற்றும் முழு அரசு இயந்திரம் சம்பந்தப்பட்ட அரசு நிகழ்ச்சியாகவே ராமர் கோவில் விழா நடத்தப்பட்டது. எனவே, ஒட்டுமொத்த விழாவும், இந்திய ஆட்சியின் அடிப்படைக் கோட்பாட்டை நேரடியாக மீறிய செயலாகும். அதாவது அரசியலமைப்பின் கீழ் அரசுக்கு எந்த மத சார்பும் அல்லது முன்னுரிமையும் இருக்கக்கூடாது. மேலும், இது அரசியல் மற்றும் தேர்தல் ஆதாயங்களை நோக்கமாக கொண்ட நிகழ்வாகும். ராமர் கோவில் கும்பாபிஷேக விழாவையொட்டி ஆர்.எஸ்.எஸ். மற்றும் பா.ஜ.க.வினர் நாடு முழுவதும் பிரசாரம் மேற்கொண்டனர். விழா நிகழ்வுகளை பொது இடங்களில்…

Read More

உத்தர பிரதேச மாநிலம் அயோத்தியில் கட்டப்பட்டுள்ள ராமர் கோவில் பிரதிஷ்டை விழா கடந்த 22-ந்தேதி கோலாகலமாக நடைபெற்றது. இதனைத்தொடர்ந்து நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து அயோத்திக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை படிப்படியாக அதிகரித்து வருகிறது. குறிப்பாக தென்னிந்தியாவில் இருந்து பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் ராமர் கோவிலுக்கு தினசரி செல்கின்றனர். இந்நிலையில் சென்னை-அயோத்தி இடையேயான தினசரி விமான சேவையை மத்திய விமானப் போக்குவரத்துத்துறை மந்திரி ஜோதிராதித்ய சிந்தியா, பிப்ரவரி 1-ம் தேதி தொடங்கி வைக்க உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி சென்னை, மும்பை, பெங்களூர், ஆமதாபாத், பாட்னா, மும்பை, பெங்களூரு, ஜெய்ப்பூர் நகரங்களில் இருந்து அயோத்திக்கு தினசரி விமான சேவை தொடக்கங்கப்பட உள்ளது. முன்னதாக ராமர் கோவில் திறப்பு விழாவிற்காக அந்த நகரில் புதிய விமான நிலையம் ஒன்று அமைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Read More

ராஷ்ட்ரிய ஜனதா தள தலைவரும், பீகார் முன்னாள் முதல்-மந்திரியுமான லாலு பிரசாத் யாதவ் கடந்த 2004 முதல் 2009-ம் ஆண்டு வரை மத்திய ரெயில்வே மந்திரியாக இருந்தார். அப்போது, ரெயில்வேயில் பணி நியமனத்துக்கு நிலம் லஞ்சமாக பெற்றதாக புகார் எழுந்தது. இது தொடர்பாக லாலு பிரசாத் யாதவ், மனைவி ரப்ரி தேவி மற்றும் குடும்பத்தினர் மீது பல்வேறு வழக்குகள் பதிவு செய்யப்பட்டு உள்ளன. இதில் நிதி முறைகேடு தொடர்பாக அமலாக்கத்துறையும் விசாரணை நடத்தி வருகிறது. இந்த வழக்கு விசாரணைக்கு ஆஜராகுமாறு லாலு பிரசாத் யாதவுக்கு சம்மன் அனுப்பப்பட்டு இருந்தது. அதன்படி நேற்று அவர் பாட்னாவில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் நேரில் ஆஜரானார். காலை 11 மணியளவில் ஆஜரான லாலு பிரசாத் யாதவிடம் இரவு சுமார் 9 மணி வரை தொடர்ந்து 10 மணி நேரம் அதிகாரிகள் விசாரணை நடத்தினர். இதில் அவரது வாக்குமூலத்தை அதிகாரிகள் பதிவு செய்து கொண்டனர்.

Read More

பாகிஸ்தான் முன்னாள் பிரதமரும், முன்னாள் கிரிக்கெட் வீரருமான இம்ரான் கான், பாகிஸ்தான் தெஹ்ரிக்- இ-இன்சாப் (பிடிஐ) கட்சித் தலைவராக உள்ளார். 71 வயதான இம்ரான் கான், 2018 முதல் ஏப்ரல் 2022, வரையிலான காலகட்டத்தில் பாகிஸ்தானின் பிரதமராக பதவி வகித்தார். இந்தநிலையில் அவர் மீது, அரசு ரகசியங்களை கசியவிட்ட குற்றச்சாட்டு உள்பட பல்வேறு குற்றச்சாட்டுகள் உள்ளன. அரசு ரகசியங்களை கசியவிட்ட குற்றச்சாட்டில் கடந்த மாதம் இம்ரானுக்கு நீதிமன்றம் ஜாமீன் வழங்கியிருந்தது. இந்த வழக்கில் இன்று இம்ரான் கான் மற்றும் அவரது தெஹ்ரிக்-இ-இன்சாப் கட்சியின் துணை தலைவர் குரேஷிக்கும் தலா 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து அந்நாட்டின் சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஏற்கனவே பரிசுப்பொருள் வழக்கில் விதிக்கப்பட்ட 3 ஆண்டுகள் சிறைக்கு நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Read More

மதுரை பெரியார் பேருந்து நிலையம் அருகே பழைய ஓய்வு திட்டத்தை மீட்டெடுத்தல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 500க்கும் மேற்பட்ட ஜாக்டோ ஜியோ அமைப்பினர் சாலை மறியல்.. பழைய ஓய்வு திட்டத்தை மீட்டெடுத்தல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி மதுரை பெரியார் பேருந்து நிலையம் அருகே ஜாக்டோ ஜியோ மாநில ஒருங்கிணைப்பாளரா செல்வம் தலைமையில் 500க்கும் மேற்பட்டோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் தேர்தல் கால வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும் என்றும் 2003 க்கு பிறகு அரசு பணியில் சேர்ந்து ஒரு தற்போது நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் புதிய ஓய்வு திட்டத்தை கைவிட்டு பழைய ஓய்வு திட்டத்தினை அமல்படுத்த வேண்டும் ‌ அரசின் பல்வேறு துறைகளில் 30 விழுக்காட்டிற்கு மேலுள்ள காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். 21 மாத ஊதிய மாற்று நிலுவைத் தொகை அரசு பணியாளர்களுக்கு மறுக்கப்பட்டதை உடனடியாக வழங்க வேண்டும். உள்ளாட்சி அமைப்புகளில் பல்வேறு அரசு துறைகளிலும்…

Read More

ஸ்பெயின் தலைநகர் மேட்ரிட்டில் நடைபெற்ற முதலீட்டாளர்கள் மாநாட்டில் தமிழ்நாட்டில் தொழில் முதலீடுகளை மேற்கொள்ள அழைப்பு விடுத்தார். ஸ்பெயின் நாட்டின் தலைநகரான ‘மேட்ரிட்’ நகருக்கு நான் வருகை தருவது இதுவே முதல் முறை. உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடான இந்தியாவில் இருக்கும் தமிழ்நாடு என்ற மிக முக்கியமான மாநிலத்தில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல்- அமைச்சராக நான் இருக்கிறேன். எங்களது கட்சி 75 ஆண்டுகளுக்கு முன் தொடங்கப்பட்டது. ஆறு முறை தமிழ்நாட்டில் ஆட்சிக்கு வந்துள்ளது. திருவள்ளுவரை நீங்கள் கேள்விப்பட்டிருப்பீர்கள். அவர் தமிழ் மொழியில்தான் திருக்குறளை எழுதினார். அவரது திருக்குறள் உலகின் 200 மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளது. அத்தகைய பெருமையும் பாரம்பரியமும் கொண்ட மாநிலத்தில் இருந்து நான் வந்துள்ளேன். கால்பந்து விளையாட்டில் புகழ் பெற்ற நாடு ஸ்பெயின். ஸ்பெயினை நான் இன்னும் சுற்றிப் பார்க்கவில்லை. நான் பார்த்த வரையில் கலைகளின் நாடாகக் காட்சியளிக்கிறது. உங்களது கலை உணர்வு ஒவ்வொரு கட்டிடத்திலும், தெருக்களிலும், ஒவ்வொரு மூலையிலும் உள்ளது.…

Read More

சண்டிகர் மாநகராட்சி மேயர், மூத்த மேயர், துணை மேயர் ஆகிய பதவிகளுக்கான வாக்குப்பதிவு பஞ்சாப் மற்றும் அரியானா நீதிமன்றத்தின் அறிவுறுத்தலின்படி இன்று நடைபெற்றது. இந்த தேர்தலில் இந்தியா கூட்டணி கட்சிகளான காங்கிரஸ் மற்றும் ஆம் ஆத்மி கட்சிகள் இணைந்து பா.ஜ.க.வை எதிர்த்து போட்டியிட்டன. இந்தியா கூட்டணியின் அடிப்படையில் ஆம் ஆத்மி கட்சி மேயர் பொறுப்புக்கும் காங்கிரஸ் கட்சி மூத்த துணை மேயர் மற்றும் துணை மேயர் பதவிக்கும் போட்டியிட்டன. இந்நிலையில், மொத்தம் பதிவான 36 வாக்குகளில் பா.ஜ.க. வேட்பாளர் மனோஜ் சோன்கர் 16 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். மேலும் இந்தியா கூட்டணியின் 8 வாக்குகள் செல்லாதவையாக அறிவிக்கப்பட்டதை அடுத்து காங்கிரஸ் மற்றும் ஆம் ஆத்மி மேயர் வேட்பாளர் குல்தீப் சிங் 12 வாக்குகளைப் பெற்று தோல்விடைந்தார். 8 வாக்குகள் செல்லாது என அறிவித்ததை எதிர்த்து பஞ்சாப் மற்றும் அரியானா உயர்நீதிமன்றத்தை அணுகப்போவதாக ஆம் ஆத்மி கட்சி அறிவித்துள்ளது.

Read More

தமிழகத்துக்கு வெளிநாட்டு முதலீடுகளை ஈர்ப்பதற்காக முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின் 10 நாள் சுற்றுப்பயணமாக ஸ்பெயின் நாட்டுக்கு சென்றுள்ளார். அங்கு நடக்கும் முதலீட்டாளர்கள் மாநாட்டில் கலந்துகொள்ளும் முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின் தமிழ்நாட்டுக்கு முதலீடுகளை ஈர்க்கும் முயற்சியில் ஈடுபடவுள்ளார். இந்தநிலையில் ஸ்பெயினில் முதலீட்டாளர்களை இன்று சந்திக்கிறார் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின். ரொகா, எடிபோன், சிஐஇ ஆகிய நிறுவனங்களை சார்ந்த முதலீட்டாளர்கள் மற்றும் தொழிலதிபர்களுடன் இன்று ஆலோசனை நடத்த உள்ளார். தமிழ்நாட்டில் தொழில் தொடங்க வருமாறு முதல்-அமைச்சர் அழைப்பு விடுக்க உள்ளது குறிப்பிடத்தக்கது.

Read More