Subscribe to Updates
Get the latest creative news from FooBar about art, design and business.
Author: Sahabudeen
கலவரத்தை தூண்டும் கேரளா ஸ்டோரி 2 திரைப்படத்தை தடை செய்க ஜி ஜி சிவா கோரிக்கை தேசிய முன்னேற்றக் கழக நிறுவனத் தலைவரும் திமுக தோழமை கட்சியுமான ஜி ஜி சிவா வெளியிட்டுள்ள கண்டன அறிக்கையில் கூறியிருப்பதாவது இந்தியாவில் பாஜக ஆட்சி அமைத்து கிட்டத்தட்ட 12 ஆண்டுகளுக்கு மேலாக ஆகிறது பாஜக ஆட்சியில் நாடு முழுவதும் இஸ்லாமியர்களுக்கு எதிராக ஒடுக்கப்பட்ட பாமர மக்களுக்கு எதிராக பல கோரத்தாண்டவங்களை பாஜக ஆர் எஸ் எஸ் கூட்டணியோடு செய்து வருகிறது திரும்பிய இடமெல்லாம் மதக்கலவரத்தையும் எனக்களவரத்தையும் மொழிக் கலவரத்தையும் செய்துவரும் பாஜக ஆர் எஸ் எஸ் சங்கங்கள் சங்க காலமாக இதை திரைப்படங்களும் மூலமாகவும் இஸ்லாமியர்களுக்கு எதிராக வன்மத்தை தக்கச் செய்கிறது அதன் அடிப்படையில் தி கேரளா ஸ்டோரி முதலாம் பாகத்தில் இந்து பெண்களை இஸ்லாமியர்கள் தீவிர அரசியல் செய்து போன்று காட்சிகளை வைத்து இன்னும் இஸ்லாமியர்களுக்கு தருமாறு சித்தரித்து கேரளாவை சேர்ந்த தயாரிப்பு…
கர்நாடகாவின் பெங்களூரு நகரில் புகழ் பெற்ற கப்பன் பார்க் என்ற பெயரில் பூங்கா ஒன்று உள்ளது. காதலர் தின கொண்டாட்டத்தின்போது, நிறைய ஜோடிகள் இந்த பூங்காவுக்கு வந்து சென்றனர். அன்பையும், மகிழ்ச்சியையும் பரிமாறி கொண்டனர். காதலர்கள் அன்பை பகிர்ந்து கொள்ளும் பகுதியாக இந்த பூங்கா உள்ளது. இருந்தபோதும், மற்றவர்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில், சில விசயங்களை செய்ய தடை விதிக்கப்பட்டு உள்ளது. இந்த பூங்காவுக்கு சமூக ஊடக பயன்பாட்டாளரான கியாதி ஸ்ரீ என்பவர் கணவர் ஷாபாஸ் அன்சார் என்பவருடன் சென்றுள்ளார். அவர்கள் இருவரும் பேசியபடி நடந்து சென்றனர். அப்போது, பொது இடத்தில் அன்பை பகிர தடை விதிக்கப்பட்ட அடையாளத்துடன் கூடிய பலகை ஒன்று வைக்கப்பட்டு இருந்தது. அந்த பகுதிக்கு வந்து, அதனை அவர்கள் இருவரும் கவனித்தனர். ஜோடி ஒன்று சாய்வு பலகையில் அமர்ந்து இருப்பது போன்றும், ஆனால் முத்தம் கொடுப்பதற்கு தடை என்றும் அந்த பலகை குறிப்பிட்டு இருந்தது. இதனை மீறினால்…
மகாராஷ்டிரா மாநிலம், மும்பை நகரில் உள்ள மான்கூர்டு பகுதியைச் சேர்ந்த சானியா (19) என்பவர், அதே பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுவனை காதலித்ததாக கூறப்படுகிறது. கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில், அந்த இளம்பெண் சிறுவனை தனது வீட்டிற்கு ஏமாற்றி அழைத்துச் சென்றதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அங்கு அவர் சிறுவனிடம் அத்துமீறியதாக கூறப்படுகிறது. இதை அறிந்த சிறுவனின் பெற்றோர் அதிர்ச்சியடைந்து உடனடியாக மான்கூர்டு போலீசில் புகார் அளித்தனர். புகாரின் அடிப்படையில், போலீசார் அந்தப் பெண் மீது போக்சோ சட்டம் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். மேலும் தலைமறைவாக உள்ள அவரை தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும், வீட்டில் நடந்த சம்பவத்தை வெளியே கூறினால் கொலை செய்துவிடுவேன் என அந்த இளம்பெண் சிறுவனை மிரட்டியதாகவும் கூறப்படுகிறது. இதனால்சிறுவன் மனஅழுத்தத்தில் இருந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. சமீபத்தில், இளம்பெண் சிறுவனை திருமணம் செய்ய அழைத்துள்ளார். ஆனால் சிறுவன் அதற்கு மறுப்பு தெரிவித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அவர், சிறுவனை…
ஆட்சியில் பங்கு என்ற கோரிக்கையை தொடர்ந்து காங்கிரஸ் முன்வைத்து வருகிறது – இபிஎஸ் அதிமுக கூட்டணி தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கி விட்டது – எடப்பாடி பழனிசாமி அதிமுக கூட்டணி தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கி விட்டது – எடப்பாடி பழனிசாமி மோசமான ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைக்கும் தேர்தல் 2026 சட்டமன்ற தேர்தல் – எடப்பாடி பழனிசாமி அதிமுக கடந்த ஆட்சியில் செய்த சாதனைகளை முன்வைத்து தேர்தலை சந்திக்கிறது – எடப்பாடி பழனிசாமி பணத்தை நம்பி தேர்தலை சந்திக்க திமுக திட்டமிட்டுள்ளது -எடப்பாடி பழனிசாமி அதிமுக ஆட்சியில் உயர்ந்து இருந்த உயர்கல்வியில் சேரும் மாணவர்களின் சதவிகிதம் தற்போது குறைந்துள்ளது. இபிஎஸ் காலியாக உள்ள அரசு காலிப் பணியிடங்கள் நிரப்பப்படாமல் உள்ளது -எடப்பாடி பழனிசாமி மின்சாரம், குடிநீர் என அனைத்திலும் திமுக ஆட்சி வரியை உயர்த்தி இருக்கிறது எடப்பாடி பழனிசாமி அதிமுக ஆட்சியில் அண்டை மாநிலங்களில் இருந்து உணவுப் பொருட்களை கொள்முதல் செய்து விலைவாசியை கட்டுப்படுத்தினோம்…
ரஷ்யாவின் எதிர்க்கட்சித் தலைவர் அலெக்ஸி நவால்னி விஷம் வைத்து கொல்லப்பட்டார் என்பதை பிரிட்டன், பிரான்ஸ், ஜெர்மனி, ஸ்வீடன் மற்றும் நெதர்லாந்து உள்ளிட்ட ஐந்து ஐரோப்பிய நாடுகள் உறுதி செய்துள்ளன. கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு உயிரிழந்த அவரது உடலில் எபபாட்டடின் (Epibatidine) விஷம் இருந்ததை இந்த நாடுகள் உறுதி செய்தன. இது தென் ஆப்பிரிக்காவில் காணப்படும் ஒரு தவளை இனத்துக்கு உள்ள விஷம் எனவும் இந்த நாடுகள்தெரிவித்துள்ளனர்.மேலும், சர்வதேச சட்ட விதிகளை புறக்கணித்து இந்த தாக்குதலை ரஷ்யா நடத்தி உள்ளதாக இந்த ஐந்து ஐரோப்பிய நாடுகளும் கூறியுள்ளன.
என்ன காரணம்? தமிழகத்தில் மகளிர் உரிமைத்தொகை பெற்று வரும் பெண்களுக்கு தேர்தல் காலத்தில் வரும் 3 மாத உரிமைத் தொகை மற்றும் கோடைகால ஊக்கத் தொகை ரூ.2 ஆயிரம் ஆகியவற்றை சேர்த்து ரூ.5 ஆயிரத்தை மொத்தமாக 1 கோடியே 31 லட்சம் பெண்களுக்கு வழங்கி தமிழக அரசுஇன்ப அதிர்ச்சியை கொடுத்தது. இந்நிலையில், மதுரையை சேர்ந்த சங்கரபாண்டி என்ற அந்த சமூக ஆர்வலர் தனது மனைவி பெயருக்கு அரசு அனுப்பி இருந்த ரூ.5 ஆயிரம் பணத்தையும்மனைவி ஒப்புதலுடன் மணி ஆர்டர் மூலம் மீண்டும் அரசுக்கே திருப்பி அனுப்பி வைத்து உள்ளார். இதுபற்றி குறிப்பிட்டு உள்ள அவர் ‘கடன் சுமையுடன் இருக்கும் தமிழக அரசுக்கு என் பங்களிப்பாக இருக்கட்டும் என்று கடிதம் எழுதி உள்ளார். தன் பணத்தை திருப்பி அனுப்பியதை சமூக வலைத்தளங்களிலும் அவர் பதிவிட்டுள்ளார்.இது பார்வையாளர்கள்மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
த.வெ.க. வெற்றி பெற்றதும் நாசரேத்தில் ஐ.டி. பார்க் வருவது தான் எங்கள் கனவு என்று நாசரேத் பொதுக்கூட்டத்தில் நாஞ்சில் சம்பத் பேசினார். நாசரேத்தில் பேரூர் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் 3வது ஆண்டு உதயதின விழா மாபெரும் பொதுக்கூட்டம் நடைபெற்றது. நாசரேத் சீரணிக் கலையரங்கில் வைத்து நடைபெற்ற தமிழக வெற்றிக் கழகத்தின் 3வது ஆண்டு உதயதின பொதுக்கூட்டத்திற்கு தூத்துக்குடி தெற்கு மாவட்ட செயலாளர் பிரைட்டர் தலைமை வகித்தார். கூட்டத்தில் நாசரேத் த.வெ.க. நகர செயலாளர் சுதர்சன் வரவேற்று பேசினார்.நாசரேத் கழக துணைச் செயலாளர் அப்பலோஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். இக் கூட்டத்திற்கு மாவட்ட இணை செயலாளர் விஜய் ஆனந்த்.பொருளாளர் சிவகுமார், ஆழ்வை ஒன்றிய செயலாளர் ஆசீர் ராஜகுமார், மாவட்ட கழக துணைச் செயலாளர் சுபத்ரா முருகன், ஜெகன் செல்வராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இக்கூட்டத்தில் சிறப்பு விருந்தினராக கழக பரப்புரை செயலாளர் நாஞ்சில் சம்பத், கர்ம வீரர் காமராஜர் பேத்தி மற்றும்…
அதிமுக முன்னாள் அமைச்சர் நிலோபர் கபில், திமுகவில் இணைய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கட்சித் தலைமையுடன் ஏற்பட்ட அதிருப்தி மற்றும் புறக்கணிப்பு காரணமாக நிலோபர் கபில் கட்சி தாவ உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழகத்தில் 2016 ஆம் ஆண்டு அதிமுக ஆட்சி காலத்தின்போது தொழிலாளர் நலத்துறை அமைச்சராக இருந்தவர் நிலோபர் கபில். தொழிலாளர் நலத்துறை அமைச்சராக நிலோபர் கபில் இருந்த காலத்தில், கோடிக்கணக்கில் பண மோசடியில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. அதனை தொடர்ந்து, அதிமுகவில் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து அவர் நீக்கப்பட்டார். சிறிது காலம் அமைதியாக இருந்த நிலோபர் கபில் மீண்டும் அதிமுகவில் இணைந்தார். ஆனால், அவருக்கு கட்சியில் முக்கியத்துவம் அளிக்கப்படவில்லை என்று தெரிகிறது. கட்சி தலைமையுடனும், முன்னாள் வணிக வரித்துறை அமைச்சர் கே.சி.வீரமணி உடனும் மோதல் போக்கை கடைபிடித்து வந்ததால் 2021 ஆம் ஆண்டு சட்டசபை தேர்தலில் ஜோலார்பேட்டை தொகுதியில் போட்டியிட அவர் வாய்ப்பு கேட்டும் அவருக்கு வழங்கப்படவில்லை.…
நாசரேத் பகுதிகளில் உள்ளவர்கள் உரிமம் இல்லாத நாட்டு துப்பாக்கிகளை வருகிற பிப்ரவரி 15 ந் தேதிக்குள் ஒப்படைக்க கெடு விதித்து திருச்செந்தூர் வனத்துறையினர் பிரச்சாரம் செய்தனர். தூத்துக்குடி வனக்கோட்டம் திருச்செந்தூர் வனச்சரகம் சார்பில் நாசரேத் பகுதியில் வாழும் கிராம மக்கள் உரிமம் இல்லாத நாட்டுத் துப்பாக்கி வைத்திருந்தால் தாமாகவே முன்வந்து வனத்துறை அலுவலரிடம் அல்லது ஊர் முக்கிய பிரமுகர்கள் மூலமாக பிப்ரவரி 15ம் தேதிக்குள் ஒப்படைக்க வேண்டும் என வனத்துறை எஸ்.ஐ. பிரான்ஸிஸ் அரவிந்த் தலைமையில் வனத்துறையினர் துண்டு பிரசுரம் மற்றும் வாகனத்தில் பிரச்சாரம் மூலம் மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர். மேலும் பிப்ரவரி 15ம் தேதிக்குள் உரிமம் இல்லாத நாட்டு துப்பாக்கி ஒப்படைக்கும் நபர்கள் மீது எவ்வித சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படாது எனவும் அவ்வாறு ஒப்படைக்காமல் வருங்காலத்தில் வன விலங்குகள் வேட்டையாடுதல் போன்ற சமுக விரோத செயல்களில் ஈடுபடும் நபர்கள் மீது வனஉயிரின பாதுகாப்பு சட்டம் மற்றும் இந்திய படைக்கலன் சட்டத்தின்…

