Author: admin

கரூர் மாவட்டம் முழுவதும் உள்ள ஏழை, எளிய மற்றும் நடுத்தர மக்கள் வறுமையின் காரணமாக தனது வாழ்வாதார அவசிய தேவைக்கு வேறு வழியின்றி வட்டிக்கு பணம் வாங்குகின்றனர்; இந்த சூழலை பயன்படுத்தி கந்து வட்டி கும்பல் இது போன்ற மக்களை குறிவைத்து நாங்கள் உங்களுக்கு உதவுகிறோம் என்று கூறி கடன் கொடுக்கின்றனர், ஆனால் கொடுத்த கடனை விட பல மடங்கு அதிகமாக வட்டிக்கு மேல் வட்டி (கந்து வட்டி) வசூல் செய்கின்றனர், மேலும் வறுமையின் காரணமாக அவர்களால் கடனை திருப்பித் தர தாமதமானால் அவர்களிடம் கந்து வட்டி கும்பல் மிகவும் தகாத முறையில் கடுமையாக நடந்து கொள்கின்றனர், மேலும் பெண்களுக்கு பாலியல் ரீதியான துன்பங்களையும் கொடுக்கின்றனர்; இது சம்பந்தமாக பாதிக்கப்பட்டவர்கள் காவல்துறையிடம் புகார் அளித்தும், எந்த நடவடிக்கையும் எடுக்கப்படுவதில்லை, இதனால் பாதிப்புக்குள்ளான மக்கள் மன உளைச்சல் ஏற்பட்டு, தற்கொலைக்கும் தூன்பப்படுகின்றனர், இதில் பல உயிர்களும் பறிபோகியுள்ளது, எனவே தமிழக அரசு 2003-கந்து…

Read More

மோடி எதிர்ப்பில் திமுக இரட்டை நிலை! – எஸ்.டி.பி.ஐ. கட்சி குற்றச்சாட்டு இதுதொடர்பாக எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது; கேலோ இந்தியா விளையாட்டு போட்டியின் துவக்க நிகழ்ச்சி நேற்று முன்தினம் சென்னையில் நடைபெற்றது. கேலோ இந்தியா விளையாட்டுப் போட்டியின் தொடக்க விழாவை கடந்து, அது முழுக்க முழுக்க பிரதமர் மோடிக்கு திமுக அரசு அளித்த வரவேற்பு நிகழ்ச்சியாகவே இருந்தது. கோபேக் மோடியை ட்ரெண்டாக்கியவர்கள் இன்றைக்கு கம்பேக் மோடி, வெல்கம் மோடி என புகழாரம் சூட்டத் தொடங்கி விட்டார்கள். ஆட்சிக்கு வருவதற்கு முன்னர் ஒரு நிலைப்பாடு, ஆட்சிக்கு வந்த பின்னர் வேறு நிலைப்பாடு என இரட்டை நிலைப்பாட்டை திமுக பின்பற்றத் தொடங்கியுள்ளது. கேலோ இந்தியா விளையாட்டு போட்டி தொடக்க நிகழ்ச்சிக்கு பிரதமர் மோடியை அழைக்க வேண்டும் என்கிற நிர்ப்பந்தம் எங்கு ஏற்பட்டது. கடந்த ஆண்டு பாஜக ஆளும் மத்திய பிரதேசத்தில் நடந்த கேலோ இந்தியா விளையாட்டு…

Read More

பாபநாசத்தில் நகர அ.தி.மு.க. சார்பில் எம்.ஜி.ஆர் . 107ஆவது பிறந்தநாள் விழா … தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் நகர அ.தி.மு.க சார்பில் தமிழக முன்னாள் முதலமைச்சர் புரட்சித்தலைவர் டாக்டர் எம்.ஜி.ஆர் அவர்களின் 107 ஆவது பிறந்தநாள் விழா பாபநாசம் கடை வீதியில் நடைபெற்றது. பாபநாசம் நகர அ.தி.மு.க செயலாளர் கோவி. சின்னையன் தலைமை வகித்து எம்.ஜி.ஆர். திருவுருவ படத்திற்கு மலர் தூவி மாலை அணிவித்து மரியாதை செலுத்தி பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கினார் . நிகழ்ச்சியில் பாபநாசம் ஒன்றிய தலைவர் சபேசன், பாபநாசம் பேரூராட்சி கவுன்சிலர் பாலகிருஷ்ணன் , நகரத் தலைவர் அப்துல் காதர், நகரத் துணைச் செயலாளர் அன்பழகன், பாபநாசம் பேரூராட்சி முன்னாள் கவுன்சிலர்கள் வழக்கறிஞர் சரவணன், செல்வம், மாவட்ட பிரதிநிதிகள் மணி ,அப்துல் ரசீது ,வார்டு செயலாளர்கள் ஜெம்புலிங்கம், ஜான் பிரிட்டோ, காசிநாதன், நகர எம்ஜிஆர் மன்ற செயலாளர் பத்மநாதன் மற்றும் வார்டு செயலாளர்கள், ஒன்றிய பிரதிநிதிகள் மற்றும் அ.தி.மு.க…

Read More

சமத்துவ பொங்கலை முன்னிட்டு, சாயல்குடி பகுதியில் இருந்து பல சேவைகள் செய்து வரும் உங்கள் மனிதம் GOP அறக்கட்டளை சார்பில் ஏழை எளிய மக்களுக்கு அரிசி காய்கறி வழங்குவது என்று முடிவு செய்து அதன் அடிப்படையில் இன்று20 குடும்பங்களுக்கு அரிசி, காய்கறி வழங்கப்பட்டது,நன்கொடை வழங்கிய அனைவருக்கும் இறைவன் அருள் புரிவானாகஇன்றைய நிகழ்வில் கலந்து கொண்டநண்பர் தங்கம், பங்காளி சுயம்பு, சேக், தம்பி நரிப்பையூர் சிவா,தோழி தீப ராணி, அக்கா புஷ்பா, சகோதரி அசர் பானு நிகழ்வை ஒருங்கிணைப்பு செய்த அண்ணன் பாஸ்கர், அண்ணன் குருமூர்த்தி , அண்ணன் கோவிந்தன்நிறுவன ஆசிரியர் முகமது முசாபர் கனி மற்ற அனைவரும் வரும் காலங்களில் இன்னும் அதிகமாக பல உதவிகள் ஏழை எளிய மக்களுக்கு செய்வது என்று உறுதி எடுத்துக் கொண்டனர்

Read More

இந்திய விமானத்துறையில் பணிபுரிய விரும்புபவர்களுக்கு அருமையான வாய்ப்பு. விமானப்படையில் அக்னிவீர் வாயு வேலை வாய்ப்புக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 3500 இடங்கள் நிரப்பப்பட உள்ளன. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் 06.02.2024க்குள் விண்ணப்பித்துக் கொள்ளுங்கள். AGNIVEERVAYU காலியிடங்களின் எண்ணிக்கை: 3500 வயதுத் தகுதி : இந்தப் பணியிடங்களுக்கு 21 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். கல்வித் தகுதி : 12 ஆம் வகுப்பில் இயற்பியல் மற்றும் கணித பாடங்கள் படித்து தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். சம்பளம் : முதல் ஆண்டு ரூ. 30,000, இரண்டாம் ஆண்டு ரூ. 33,000, மூன்றாம் ஆண்டு ரூ. 36,500, நான்காம் ஆண்டு ரூ. 40,000 தேர்வு செய்யப்படும் முறை : இந்த பணியிடங்களுக்கு ஆன்லைன் தேர்வு மற்றும் உடற்தகுதித் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். விண்ணப்பிக்கும் முறை : இந்த பணியிடங்களுக்கு https://agnipathvayu.cdac.in/AV/ என்ற இணையதளப் பக்கம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பிக்க கடைசி தேதி : 06.02.2024 விண்ணப்பக் கட்டணம்: ரூ. 550…

Read More

சென்னை உயர் நீதிமன்றத்தில் ஓட்டுநர் பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. மொத்தம் 13 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்த பணியிடங்கள் நேரடி நியமனம் அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் 13.02.2024க்குள் விண்ணப்பித்துக் கொள்ளுங்கள். ஓட்டுநர் காலியிடங்களின் எண்ணிக்கை : 13 கல்வித் தகுதி : 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மற்றும் இலகு ரக வாகன ஓட்டுநர் உரிமம் வைத்திருக்க வேண்டும். வயதுத் தகுதி : 01.07.2024 அன்று 18 வயது முதல் 32 வயதிற்குள் இருக்க வேண்டும். தமிழக அரசு விதிகளின்படி வயது வரம்பில் தளர்வு உண்டு. சம்பளம் : ரூ. 19,500 – 71,900 தேர்வு செய்யப்படும் முறை : இந்தப் பணியிடங்களுக்கு எழுத்துத் தேர்வு, செய்முறைத் தேர்வு மற்றும் வாய்மொழித் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். விண்ணப்பிக்கும் முறை : இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க https://www.mhc.tn.gov.in/recruitment/login என்ற இணையதளப் பக்கத்தில் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.…

Read More

ஐ.ஐ.டி வேலை வாய்ப்புகள் 2024: ஐ.ஐ.டியின் (IIT) வேலைவாய்ப்புக்கான முதல் அமர்வு டிசம்பரில் முடிவடைந்தது. ஆனால் கடந்த ஆண்டுகளைப் போலல்லாமல், ஐ.ஐ.டி.,கள் முதல் கட்ட தரவுகளைப் பகிர்ந்து கொள்வதில் முற்றிலும் தயக்கம் காட்டுகின்றன. இந்த ஆண்டு வேலை வாய்ப்புத் தரவுகளில் ரகசியத்தன்மைக்கு வழிவகுத்தது என்ன? ஆங்கிலத்தில் படிக்க: IIT Placements 2024 see less offers from big companies; Plan B is to focus on Indian start-ups சில மாணவர்கள் மற்றும் வல்லுனர்கள் இந்த ஆண்டு ஐ.ஐ.டி.,கள் மெதுவாக பணியமர்த்தல் சந்தையைக் கண்டதே இதற்குக் காரணம் என்று கூறுகின்றனர். IIT களில் உள்ள ஆதாரங்கள் வேலை வாய்ப்பு அமர்வின் முதல் கட்டம் எதிர்பார்த்த அளவு இல்லை என்றும், இப்போது IIT கள் அதிக எண்ணிக்கையிலான காலியிடங்களுடன் அதிக நிறுவனங்கள் களமிறங்கும் என்ற நம்பிக்கையுடன் இரண்டாவது அமர்வுக்கு தயாராகி வருகின்றன என்றும் தெரிவிக்கின்றன. “இத்தனை ஆண்டுகளில், வேலை வாய்ப்பு…

Read More

இந்திய அணுசக்தி துறையின் கீழ் செயல்பட்டு வரும் எலக்ட்ரானிக்ஸ் கார்ப்ரேசன் ஆஃப் இந்தியா (ECIL) நிறுவனத்தில் ஜூனியர் டெக்னீசியன் (Junior Technician) பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளிவந்துள்ளது. மொத்தம் 1100 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்த பணியிடங்கள் தற்காலிக அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் 16.01.2024க்குள் விண்ணப்பித்துக் கொள்ளுங்கள். ஜூனியர் டெக்னீசியன் காலியிடங்களின் எண்ணிக்கை : 1100 எலக்ட்ரானிக்ஸ் மெக்கானிக் – 275 எலக்ட்ரீசியன் – 275 ஃபிட்டர் – 550 கல்வித் தகுதி : எலக்ட்ரானிக்ஸ் மெக்கானிக்/எலக்ட்ரீசியன்/ஃபிட்டர் பிரிவுகளில் ஐ.டி.ஐ படித்திருக்க வேண்டும். மேலும் 1 வருட அப்ரண்டிஸ் பயிற்சி பெற்றிருக்க வேண்டும். வயதுத் தகுதி : 16.01.2024 அன்று 30 வயதிற்குள் இருக்க வேண்டும். இருப்பினும் SC/ST பிரிவுகளுக்கு 5 ஆண்டுகளும், OBC பிரிவுகளுக்கு 3 ஆண்டுகளும், மாற்றுதிறனாளிகளுக்கு 10 ஆண்டுகளும் வயது வரம்பில் தளர்வு உண்டு. சம்பளம் : ரூ. 22,528 தேர்வு செய்யப்படும் முறை : ஐ.டி.ஐ படிப்புகளில் பெற்ற மதிப்பெண்களின் அடிப்படையில் தகுதியானவர்கள்…

Read More

தருமபுரி மாவட்ட ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி அலகுகளில் காலியாக உள்ள அலுவலக உதவியாளர் மற்றும் இரவுக் காவலர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 3 காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்த பணியிடங்கள் நேரடி நியமனம் அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பித்துக் கொள்ளுங்கள். அலுவலக உதவியாளர் காலியிடங்களின் எண்ணிக்கை : 1 கல்வித் தகுதி : 8 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். வயதுத் தகுதி : இந்த பணியிடங்களுக்கு 01.07.2023 அன்று 18 வயது முதல் 32 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். தமிழக அரசு விதிகளின் படி வயது வரம்பில் தளர்வு உண்டு. சம்பளம் : ரூ.15,700 – 50,000 இரவுக் காவலர் காலியிடங்களின் எண்ணிக்கை : 2 கல்வித் தகுதி : எழுதப் படிக்கத் தெரிந்திருக்க வேண்டும். வயதுத் தகுதி : இந்த பணியிடங்களுக்கு 01.07.2023 அன்று 18 வயது…

Read More

கூகுள் மற்றும் எலன் மஸ்க்கின் எக்ஸ் நிறுவனம் பணிநீக்க நடவடிக்கைகளை அறிவித்துள்ளன. செலவுகளை குறைக்கும் நடவடிக்கையாக இந்த பணிநீக்கம் செய்யப்படுவதாக கூறப்பட்டுள்ளது. 2024 இன் இரண்டாவது வாரமே, தொழில்நுட்ப பணியாளர்களுக்கு ஒரு கடினமான ஆண்டாக ஏற்கனவே உருவாகி வருகிறது. புத்தாண்டு தினத்தன்று குளிர்ச்சியானவற்றைத் திறந்த சில நாட்களுக்குப் பிறகு, கூகுள், பிளிப்கார்ட், பேடிஎம் மற்றும் பிற நிறுவனங்களின் பணிநீக்க நடவடிக்கையை எதிர்கொள்கின்றனர். அதன்படி, கூகுள் தனது டிஜிட்டல் உதவியாளர், வன்பொருள் மற்றும் பொறியியல் குழுக்களில் இருந்து நூற்றுக்கணக்கான ஊழியர்களை பணிநீக்கம் செய்வதாக அறிவித்துள்ளது. இந்த நடவடிக்கை நிறுவனத்தின் செலவுகளைக் குறைக்கும் முயற்சியின் ஒரு பகுதியாகும். கூகுள் தனது மிகப்பெரிய பணிநீக்கங்களை அறிவித்து கிட்டத்தட்ட சரியாக ஒரு வருடம் கழித்து, இந்த நடவடிக்கை வந்துள்ளது. கடந்த வருடம் 12,000 ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டனர். ப்ளூம்பெர்க்கின் அறிக்கையின்படி, கூகுள் அசிஸ்டண்ட், குரல்-செயல்படுத்தப்பட்ட தொழில்நுட்பம் மற்றும் ஆக்மென்ட்டட் ரியாலிட்டி ஹார்டுவேர் குழுவின் வளர்ச்சியில் ஈடுபட்டுள்ள பணியாளர்களை…

Read More