Author: Sahabudeen

கர்நாடக மாநிலம் பெலகாவி மாவட்டத்தை சேர்ந்தவர் 25 வயது மாணவி. இவருக்கு இன்ஸ்டாகிராம் மூலம் கலபுரகியை சேர்ந்த சிவானந்தா (27) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதில் சிவானந்தா கர்நாடக ஆயுதப்படையில்போலீஸ்காரராக பணியாற்றி வந்துள்ளார். முதலில் நண்பர்களாக பழகிய இவர்களது பழக்கம் நாளடைவில் காதலாக மாறியுள்ளது. மேலும் சிவானந்தா, மாணவியை திருமணம் செய்துகொள்வதாக ஆசை வார்த்தைகள் கூறியுள்ளார். இதனை நம்பிய அந்த மாணவி, சிவானந்தாவைகாதலிக்க தொடங்கியுள்ளார். பின்னர் காதலர்கள் 2 பேரும் பல்வேறு இடங்களுக்கு சென்றும், தங்கும் விடுதியில் அறை எடுத்து உல்லாசமாகவும் இருந்துள்ளனர். இதையடுத்து அவர்களுக்கு அடிக்கடி சண்டை வர தொடங்கியுள்ளது. இதில் ஆத்திரம் அடைந்த சிவானந்தா மாணவியை திருமணம் செய்து கொள்ள மாட்டேன் என்று கூறி, தனது காதலை முறித்து கொள்ளுமாறு மாணவியிடம் கூறியுள்ளார். இதில்மனமுடைந்த அந்த மாணவி சிவானந் தாவிடம் தொடர்ந்து மன்னிப்பு கேட்டு வந்துள்ளார்.ஆனால் அதற்கு சிவானந்தா, மாணவியின் செல்போன் எண் மற்றும் சமூக வலைதள கணக்கை…

Read More

கேரளம் மாநிலம் திருச்சூர் மாவட்டம் அவனூர் அருகே பாண்டியாட்டு வீட்டை சேர்ந்தவர் அரவிந்தாக்ஷன்.:இவரது மகள் அனுப் பிரியா(வயது 25). இவர் லாலூர் பகுதியில் உள்ள கல்லூரியில் எம்.பி.ஏ. 2-ம் ஆண்டு படித்து வந்தார். இதற்கிடையே கடந்த 19-ந்தேதி வீட்டில் இருந்து வழக்கம்போல் கல்லூரிக்கு செல்வதாக கூறி அனுப் பிரியா சென்றார். கல்லூரி முடிந்து மாலை நீண்ட நேரமாகியும் அவர் வீடு திரும்பவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த குடும்பத்தினர் கல்லூரி மற்றும் அவரது நண்பர்களிடம் விசாரித்தனர். அப்போது அனுப் பிரியாவுடன் படிக்கும் சக மாணவி, கல்லூரி அரை நாள் மட்டுமே நடந்தது, 12.30 மணிக்கு நானும், அனுப் பிரியாவும் கல்லூரியில் இருந்து வெளியே வந்தபோது அனுப்பிரியா திருச்சூர் வடக்கு பஸ் நிலையத்திற்கு சென்றதாக தெரிவித்தார். தொடர்ந்து பஸ் நிலையம் உள்பட சுற்றுவட்டார இடங்களில் தேடியும் அனுப் பிரியா கிடைக்காததால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர். இதுகுறித்து உடனே திருச்சூர் மாநகர போலீஸ் கமிஷனர் சசிதரனிம்…

Read More

அரியலூர் மாவட்டம் பெரியத்திருக்கோணத்தை சேர்ந்த 72 வயதான ராஜலட்சுமி என்ற பெண்ணை படுகொலை செய்து 14 சவரன் நகைகளுடன் தப்பிய மர்மநபர்களை போலீசார் தேடி வருகின்றனர். அரியலூர் மாவட்டம் பெரியத்திருக்கோணத்தை சேர்ந்த 72 வயதான ராஜலட்சுமி என்ற பெண்ணை படுகொலை செய்து 14 சவரன் நகைகளுடன் தப்பிய மர்மநபர்களை போலீசார் தேடி வருகின்றனர். பேரன் வசந்த் வீட்டில் பெண் வசித்துவந்த நிலையில், குழந்தைக்கு உடல் நிலை சரியில்லாமல் போனதால் வசந்த்தும் அவரது மனைவியும் மருத்துவமனைக்கு சென்றிருந்த நேரத்தில் கொலை நடந்ததாக கூறப்படுகிறது. தகவல் கிடைத்ததும் அரியலூர் மாவட்ட எஸ்பி விஷ்வேஷ் பா. சாஸ்திரி மற்றும் டிஎஸ்பி தினேஷ்குமார் ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர்.

Read More

இஸ்லாமிய நாட்காட்டியின் 9-வது மாதமான ‘ரமலான்’ அல்லது ‘ரம்ஜான்’ மாதம், இஸ்லாமியர்களுக்கு மிகவும் முக்கியமான மற்றும் புனிதமான மாதமாக திகழ்கிறது. இந்த மாதத்தில்தான், இஸ்லாமியர்களின் புனிதநூலான திருக்குரான் அருளப்பட்டதாக கூறப்படுகிறது. ரம்ஜான் மாதத்தில் இஸ்லாமியர்கள் தங்களது கடமைகளில் ஒன்றான நோன்பு இருப்பது வழக்கமாகும். இந்த மாதத்தின் இறுதியில் வானில் தோன்றும் பிறையின் அடிப்படையில் ‘ஈத் அல்-பித்ர்’ (Eid al-Fitr) எனப்படும் ‘ரம்ஜான்’ பண்டிகை கெண்டாடபடுகிறது இதன்படி, வளைகுடா நாடுகளில் இன்று ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்பட்டது. : பிறை தெரிவதில் உள்ள மாறுபாடு காரணமாக இந்தியா, மலேசியா உள்ளிட்ட சில நாடுகளில் நாளை ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்படுகிறது. முன்னதாக கடந்த பிப்ரவரி 28– ந்தேதி ஈரான் மீது இஸ்ரேல், அமெரிக்கா கூட்டுப் படைகள் நடத்திய தாக்குதலில், ஈரானின் உச்ச தலைவர் அயத்துல்லா அலி காமேனி கொல்லப்பட்டார். அதனை தொடர்ந்து வளைகுடாஉள்ள அமெரிக்க படைத் தளங்கள் மீது ஈரான் க்குதல் நடத்தி வருகிறது.அதனால் மத்திய…

Read More

தி.மு.க கூட்டணியில் தமிழகத்தில் 10 சட்டமன்ற தொகுதிகளில் போட்டியிட வி.சி.க விருப்பம்:புதுச்சேரியில் திமுக கூட்டணியில் 5 சட்டமன்ற தொகுதிகள் வேண்டும் என கேட்கும் வி.சி.கதமிழகத்தில் கடந்த முறை 6 தொகுதிகளில் போட்டியிட்ட நிலையில் கூடுதலாக 4 இடம் கேட்கும் வி.சி.க தமிழகத்தில் கடந்த முறை 6 தொகுதிகளில் போட்டியிட்ட நிலையில் கூடுதலாக 4 இடம் கேட்கும் வி.சி.கதமிழகத்தில் 7 தொகுதிகள் வரை வி.சி.கவிற்கு வழங்க தி.மு.க:முன்வந்துள்ளதாக தகவல் புதுச்சேரியில் வி.சி.கவிற்கு கூட்டணியில் ஒரு இடம் வழங்க உறுதி செய்திருப்பதாக தகவல்கூடுதலாக 1 தொகுதி என்பது போதாது இரட்டை இலக்கம் என்பதில் திருமாவளவன் உறுதி என தகவல் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினைஇரண்டு முறை சந்தித்து இரட்டை இலக்க தொகுதிகளை வலியுறுத்தியுள்ளார் திருமாதிமுக கூட்டணியில் புதிதாக இணைந்துள்ள தேமுதிகவிற்கு இரட்டை இலக்க தொகுதிகள் என அனுமானம் தேமுதிகவிற்கு இரட்டை இலக்கத்தில் தொகுதிகளை ஒதுக்கிவிட்டு விசிகவிற்கு ஒற்றை இலக்கமா? என கேள்வி

Read More

பெண்களை இழிவுபடுத்தும் கருத்துகள் – SDPI மகளிரணி கடும் கண்டனம்!! SDPI கட்சி மகளிரணி மாநில தலைவர் K. பாத்திமா கனி அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: சி. வே. சண்முகம் மற்றும் திண்டுக்கல் சீனிவாசன் ஆகியோர் பெண்களை குறித்து வெளியிட்டுள்ள அவமதிப்பான மற்றும் இழிவான கருத்துகள் தீவிரமாகக் கண்டிக்கப்படுகின்றன. அதிலும் சட்ட ஒழுங்கை பேணுகின்ற மாநிலங்களவை உறுப்பினரும் முன்னாள் அமைச்சரும் பெண்களை தரக்குறைவாக பேசி இருப்பதை SDPI கட்சியின் மகளிர் அணி வன்மையாக கண்டிக்கிறது. பொதுமக்கள் முன்னிலையில் பேசும் அரசியல் தலைவர்கள் தங்களது வார்த்தைகளில் பொறுப்புணர்வையும், சமூக மரியாதையையும், பெண்களின் கண்ணியத்தையும் பாதுகாக்க வேண்டியது அவசியம். ஆனால் இத்தகைய பெண்விரோத கருத்துக்கள், சமூகத்தில் தவறான முன்னுதாரணத்தை உருவாக்குகின்றன. ஒரு பெண் நடிகை என்பதற்காக அவளை அவமதிப்பது ஏற்றுக்கொள்ள முடியாது. இது பெண்களின் கண்ணியத்தையும், பாதுகாப்பையும் பாதிக்கும் செயலாகும். இத்தகைய மனநிலைகள் பெண்கள் முன்னேற்றத்திற்கு பெரிய தடையாக உள்ளன. இந்நிலையில், தமிழக…

Read More

தெலுங்கானா மாநிலத்தை சேர்ந்தவர் ஹீமா பிந்து (வயது 20). பி.எஸ்சி., பட்டப்படிப்பு படித்து வந்த இவர் பூனை ஒன்றை தத்தெடுத்து வளர்த்து வந்துள்ளார். இந்நிலையில், அவர் திடீரென விஷம் குடித்து தற்கொலை செய்துள்ளார். இது குறித்து மீர்பேட் காவல் நிலைய ஆய்வாளர் சங்கர் குமார் கூறும்போது, கல்லூரி மாணவி ஹீமா பிந்து தத்தெடுத்து வளர்த்து வந்த பூனை திடீரென மரணம் அடைந்துள்ளது. இந்த வருத்தத்தில் இருந்த அவர் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் விஷம் குடித்திருக்கிறார்இதனை அறிந்து, உடனடியாக அவர் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டார். எனினும் அவர் மரணம் அடைந்து விட்டார் என கூறினார்.. இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Read More

ஆதவ் அர்ஜுனா திமுகவின் “ஸ்லீப்பர் செல்” என்றும், திமுகவில் உதயநிதிக்கு எதிராக உள்ள சில நபர்களுக்காக அவர் வேலை செய்து வருவதாக லட்சிய ஜனநாயக கட்சியின் தலைவரும், லாட்டரி அதிபர் மகனுமான ஜோஸ் சார்லஸ் மார்டின் வீடியோ வெளியிட்டுள்ளார். ஆதவ் அர்ஜூனா தவெகவிற்கு சென்றிருப்பதே ‘ஸ்லீப்பர் செல்’ வேலையைச் செய்வதற்காகத் தான், விஜய்க்கு எதிரான ஒரு பிம்பத்தை ஏற்படுத்தி மக்களிடையே தவறான செய்தியை பரப்ப முயற்சி செய்து வருவதாகவும் தெரிவித்துள்ளார்.

Read More

தி.மு.க. ஆட்சியில் தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டு பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை எனக்கூறி சென்னை எம்.ஜி.ஆர். நகரில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் தேசிய ஜனநாயகக் கூட்டணி கட்சியினர் பங்கேற்ற கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அதில் பேசிய இபிஎஸ், இளைஞர்கள் போதைக்கு அடிமையாகி சீரழிந்து வருவதாகவும், தமிழகத்தில் கடந்த 75 நாட்களில் 234 கொலைகள் நடந்துள்ளதாகவும் கூறினார். தமிழ்நாட்டுக்கு இனி வசந்த காலம் ஆரம்பமாகிவிட்டது, பெண்களுக்குப் பாதுகாப்பான ஆட்சி விரைவில் வரும் என்றும் இபிஎஸ் தெரிவித்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த எடப்பாடி பழனிசாமி, அதிமுக தேர்தல் அறிக்கை விரைவில் வெளியிடப்படும் என்றார். தொகுதி பங்கீடு குறித்து கூட்டணி கட்சி தலைவர்களுடன் ஆலோசித்து விரைவில் அறிவிப்போம் என தெரிவித்தார்.

Read More

நாம் எப்போதும் மக்களின் டீம் தான் எனவும் மதசார்பற்ற கொள்கையிலும், சமூகநீதி நிலைபாட்டிலும் எந்த சமரசமும் இல்லை என தவெக தலைவர் விஜய் தெரிவித்துள்ளார். மாமல்லபுரத்தில் தவெக சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட இஃப்தார் நிகழ்ச்சியில் தவெக தலைவர் விஜய் பங்கேற்று நோன்பாளிகளுடன் நோன்பு திறந்தார். பின்னர் நிகழ்ச்சியில் பேசிய விஜய், அரசியலுக்கு வந்தது முதல் பல்வேறு வதந்திகளை பரப்பியவர்கள், இந்த கூட்டணி, அந்த கூட்டணி என சேரப் போவதாக பொய் பிரச்சாரம் செய்து வருவதாக கூறி கூட்டணி குறித்த யூகங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்தார். யார் என்ன அவதூறு பரப்பினாலும் நம்ப வேண்டாம் என கேட்டுக்கொண்ட விஜய், தவெக தலைமையில் தான் ஆட்சி என்பதில் உறுதியாக இருப்பதாகவும் தெரிவித்தார்.

Read More