Subscribe to Updates
Get the latest creative news from FooBar about art, design and business.
Author: Sahabudeen
அமைச்சர் கீதா ஜீவன் அவர்கள் தலைமையில் நடைபெற்றதுஇதில் நமது மனிதநேய மக்கள் கட்சியின் சார்பாகமாவட்டத் தலைவர் கயத்தாறு அஸ்மத் தலைமையில்மனிதநேய மக்கள் கட்சியின் மாவட்ட செயலாளர் யூசுப்,தமுமுக மாவட்ட செயலாளர் பரக்கத்துல்லா,சுற்றுச்சூழல் அணி மாவட்ட செயலாளர் முகமது அலி யார்,மாவட்டத் துணைச் செயலாளர் பிரவீன் குமார், தூத்துக்குடி மாவட்ட மருத்துவ அணி செயலாளர் தூத்துக்குடி மாநகரத் தலைவர் ஷேக் மொகைதீன்,மாநகரத் துணைத் தலைவர் காம்ப்ளக்ஸ் ஷேக்,உடன்குடி நகரச் செயலாளர் ஹாலித் உடன்குடி நகர பொருளாளர் , இப்ராகிம்தூத்துக்குடி மாநகர தமுமுக செயலாளர் சையத் அலி,தூத்துக்குடி மாநகர ஐபிபி செயலாளர்,தூத்துக்குடி நகர செயலாளர் கமருதீன்மற்றும் நமது மனிதநேய மக்கள் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர் .
போலி செய்தியாளர்கள் சிக்கியது எப்படி? கர்நாடக மாநிலம் பெலகாவியில் கணவருடன் வசித்து வந்த அரசு பெண் அதிகாரி ஒருவர், தனது அந்தரங்க வீடியோக்களை மொபைலில் அனுப்பி, ஒரு கும்பல் பணம் கேட்டு மிரட்டுவதாக போலீஸ் கமிஷனரிடம் புகார் அளித்துள்ளார். இது குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார், மொபைல் எண்ணை வைத்து கோகாக் பகுதியை சேர்ந்த சமீர் நிசார் அகமது ஷேக், அப்துல் ரஷீத் மகந்தர் மற்றும் முகமது பலேகுந்த்ரி ஆகிய மூன்று பேரை கைது செய்தனர். அவர்களிடம் போலீசார் நடத்திய விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள்வெளியே வந்தன. அரசு பெண் அதிகாரி வீட்டில் பணிப் பெண் ஒருவர் வேலை பார்த்து வந்துள்ளார். அரசு பெண் அதிகாரி அலுவலகம் செல்லும் போது வீட்டின் ஜன்னலில் சாவியை வைத்து விட்டு செல்வதை வாடிக்கையாக வைத்திருந்துள்ளார். அந்த பணிப் பெண்ணிற்கு மட்டும் சாவி இருக்கும்இடம் தெரிந்ததால், அவர் வழக்கம் போல சாவி மூலம் கதவை…
மனிதநேய மக்கள் கட்சியின் 18ம் ஆண்டு விழாவை முன்னிட்டு, உடன்குடியில் ஏழை களுக்கு உணவு வழங்கப்பட்டது.மாவட்ட பொறுப் பாளர் ஆசாத், மாவட்ட த.மு.மு.க.. செயலாளர் பரக்கத் துல்லாஹ் ஆகியோர் தலைமை வகித்தார்.மாவட்ட துணை செயலாளர்கள் ஜபருல் லாஹ், ரபீக், மருத் துவ சேவை அணி செயலாளர் நூர்ஜோதி, மனித நேய தொழிற் சங்க மாவட்ட செயலா ளர் ஆசாத்,உடன்குடி நகர தலைவர் அஜீஸ், நகரதுணைத் தலைவர் ஆசிக், நகர செயலாளர் ஹாலீது, நகர துணை செயலாளர் அஸ்கர், தொண்டரணி செய லாளர் இத்ரீஸ் உட்பட பலர் கலந்து கொண்டனர்
ராஜஸ்தான் மாநிலம் கங்காநகர் மாவட்டம் ராவ்லா காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கடந்த 31-ம் தேதி ஒரு விபத்து நடந்ததாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், அங்கு ஆஷிஷ் (25) என்பவர் உயிரிழந்த நிலையில் கிடந்ததையும், அவரது மனைவி அஞ்சலி மயக்க நிலையில் அருகில் இருந்ததையும் கண்டனர்.உடனடியாக ஆஷிஷ் உடல் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. இந்த சம்பவம் குறித்து அஞ்சலியிடம் போலீசார் விசாரணை நடத்திய நிலையில், பிரேத பரிசோதனை அறிக்கையில் ஆஷிஷ் விபத்தில் உயிரிழக்கவில்லை என்றும், அவர் அடித்தும் கழுத்தை நெரித்தும் கொலை செய்யப்பட்டதாகவும் தெரிய வந்தது. இதையடுத்து போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தினர். விசாரணையின் போது அஞ்சலி கூறிய தகவல்கள் ஒன்றுக்கொன்று முரணாக இருந்தன. முதலில் விபத்து நடந்ததாகவும், பின்னர் மர்ம நபர்கள் கொள்ளை முயற்சியில் தாக்கியதாகவும் அவர் கூறினார். தொடர்ந்து மேற்கொண்ட விசாரணையில், அஞ்சலி தனது கள்ளக்காதலன் சஞ்சயுடன் சேர்ந்து கணவர்…
கரூர் துயரத்தை காற்றில் பறக்க விட்டு நடனத்தில் மூழ்கி இருக்கும் விஜய்க்கு ஜி ஜி சிவா கடும் விமர்சனம்
தேசிய முன்னேற்றக் கழக நிறுவன தலைவரும் திமுக தோழமைக் கட்சியுமான ஜி ஜி சிவா வெளியிட்டுள்ள அறிக்கையில் மக்களுக்கு ஏதாவது ஒன்று பிரச்சனை என்றால் இந்த விஜய் நான் வருவேன் என்று பனையூரில் அமர்ந்து கொண்டு பஞ்ச் டயலாக் பேசி வரும் விஜய் அவர்கள் கரூர் துயர சம்பவத்திற்கு ஒரு சதவீதம் கூட அடி மனதில் இருந்து வேதனையோ ஆறுதலோ அந்த மக்களுக்காக ஏற்படுத்திக் கொள்ளவில்லை காரணம் கரூர் துயர சம்பவம் நடந்து கிட்டத்தட்ட ஒரு மாதம் கழித்து தான் வீட்டை விட்டு வெளியே வந்து பெயரளவிற்கு ஒரு சில வார்த்தைகளை பேசி அதுவும் திமுகவை விமர்சனம் வைத்து காணொளியை முடித்து வைத்தார் அதற்குப் பிறகு கரூர் மக்களை நேரடியாக சந்தித்து அவர்களுக்கு துணையாக இருப்பார் என்று பார்த்தால் அதுவும் இல்லை பிறகு ஜனநாயகன் பட இசை வெளியீட்டு விழாவை மலேசியாவில் நடித்துவிட்டு அங்கேயும் கொஞ்சம் கூட மனசாட்சி இல்லாமல் ஆடிப்…
அ.தி.மு.க.வில் இருந்து முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வெளியேற்றப்பட்ட பிறகு, அவரது ஆதரவு எம்.எல்.ஏ.க்களாக முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம், மனோஜ் பாண்டியன், அய்யப்பன் ஆகியோர் இருந்து வந்தனர். ஆனால், வர இருக்கின்ற சட்டசபை தேர்தலில் ஓ.பன்னீர்செல்வம் முடிவெடுப்பதில் தடுமாற்றத்தில் இருந்ததால், ஒவ்வொருவராக வெளியேறி வருகின்றனர். மனோஜ் பாண்டியனும், வைத்திலிங்கமும் தி.மு.க.வில் ஐக்கியமாகிவிட, அய்யப்பன் மட்டும் ஓ.பன்னீர்செல்வத்துடன் இருந்து வந்தார். சமீபத்தில் நடைபெற்ற சட்டசபை கூட்டத்திலும் அவர் ஓ.பன்னீர்செல்வத்துடன் பங்கேற்றார். இந்த நிலையில், இன்று மதுரை கோச்சடையில் உள்ள விடுதியில் தங்கியிருந்த அ.ம.மு.க. பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரனை, அய்யப்பன் திடீரென சந்தித்து பேசினார். இதனால், அவர் அ.ம.மு.க.வில் இணையப் போகிறாரா? என்று அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக எதிர்பார்க்கப்பட்டது.இந்த சந்திப்புக்கு பிறகு, டி.டி.வி.தினகரன் நிருபர்களிடம் கூறியதாவது:- ஓ.பி.எஸ். ஆதரவு எம்.எல்.ஏ. அய்யப்பன் என்னை சந்தித்தார். அரசியல் ரீதியாக வரவில்லை. எனக்கு நல்ல நண்பர். மீண்டும் வந்து சந்திப்பதாக கூறிச் சென்றிருக்கிறார். 3 முறை முதல்-அமைச்சராக இருந்த…
மக்கள் எழுச்சி ஜனநாயக கட்சியின் மாநில தலைவர் காயல் அப்பாஸ் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் கூறியிருப்பதாவது.இந்தியாவில் சுமார் 200 நூற்றுக்கும் மேல் நிடித்து வந்த ஆங்கில ஆட்சியை முடிவுக்கு கொண்டு வரும் நோக்கில் தேசிய அளவிலும், மாநில அளவிலும் பல கழகங்களையும்,புரட்சி களையும், அகிம்சை வழியில் பல போராட்டங்களையும், நிகழ்த்தி தன்னுடயை குருதியையும், தேகங்களையும் நமது தாய் நாட்டிற்க்காக அர்பணித்த தேசதலைவர்களையும், வீரர்களையும், புரட்சியாளர்களையும், நினைவு கூரும் நாள். குடியரசு தினம் ஆகும். ஆரம்ப காலத்தில் நமது மன்னர்கள் ஓற்றுமையாக இல்லாமல் இந்தியாவை சிறு சிறு மாநிலங்களாக பிரித்து ஆட்சி செய்து கொண்டிருந்ததால் வனிகம் செய்வதற்க்காக இந்தியாவில் நுழைந்த பிரிட்டிஷ்காரர்கள் படி படியாக தங்களுடைய ஆதிக்கத்தை ஏற்படுத்தி இந்தியா முழுவதும் கொடுங்கோல் ஆட்சியை அரங்கேற்றினர்.அத்தகைய கொடுங்கோல் ஆட்சியை முடிவுக்கு கொண்டு வந்து 1947 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15 ஆம் நாள் இந்தியா விடுதலை பெற்றது. இந்தியா விடுதலைக்கு பிறகு மக்களாட்சி…
பீகாரில் ஐக்கிய ஜனதா தள கட்சியை சேர்ந்த, முதல்-மந்திரி நிதிஷ் குமார் தலைமையிலான ஆட்சி நடந்து வருகிறது. கூட்டணியில் பா.ஜ.க. உள்ளது. இந்த நிலையில், பாட்னா நகரில் செய்தியாளர்களிடம் பேசிய ராஷ்டீரிய ஜனதா தள கட்சியின் தலைவர்களில் ஒருவரான சஞ்சய் யாதவ், நிதிஷ் குமார் ஆட்சியை கடுமையாக விமர்சித்து உள்ளார். அவர் கூறும்போது, பீகாரில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டு விட்டது. கடந்த 2 தசாப்தங்களில் (20 ஆண்டுகளில்) 70 ஆயிரத்திற்கும் மேற்பட்ட படுகொலைகள் நடந்துள்ளன என பரபரப்பு குற்றச்சாட்டை கூறியுள்ளார். பீகாரில் எத்தனை சி.சி.டி.வி. கேமராக்கள் உள்ளன? அவர்களுடைய காவல் நிலையத்தில் சி.சி.டி.வி. கேமராக்கள் கூட இல்லை. ஆனால், தேர்தலின்போது ஒவ்வொரு பெண்ணுக்கும் ரூ.10 ஆயிரம் கொடுக்கின்றனர் என்றார். அக்கட்சியின் தலைவர் தேஜஸ்வி யாதவ் கடந்த வாரம் பேசும்போது, மாதேபுரா, ககாரியா மற்றும் பாட்னா நகரங்களில் பெண்களுக்கு எதிரான குற்றங்களில் குற்றவாளிகளை பாதுகாக்கும் வகையில் நிதிஷ் அரசு செயல்படுகிறது என்று குற்றச்சாட்டாக…
தூத்துக்குடி ஆரோக்கியபுரத்தைச் சேர்ந்த முருகன் மகன் இசக்கிராஜ் (வயது 20), தொழிலாளி.இவருக்கும், குலசேகரன்பட்டினம் பகுதியைச் சேர்ந்த ஒரு பெண்ணுக்கும் இன்ஸ்டாகிராம் மூலம் பழக்கம் ஏற்பட்டது. இதனால் அவர் அடிக்கடி குலசேகரன்பட்டினம் சென்று வந்தார். அப்போது, அந்த பெண் இருக்கும் பகுதியில் குமரி மாவட்டத்தை சேர்ந்த திருமணமான இளம்பெண் தனது 4 வயது மகளுடன் தனியாக வாடகை வீட்டில் வசித்து வந்தார். இந்த பெண்ணுடன் இசக்கிராஜிக்கு பழக்கம் ஏற்பட்டு, நாளடைவில் கள்ளக்காதலாக மாறியதாக கூறப்படுகிறது.இதையடுத்து அந்த பெண் தனது குழந்தையுடன் உடன்குடிசெட்டியாபத்தில் ஒரு வீட்டில் வாடகைக்கு குடியேறினார்.அங்கு இசக்கிராஜ் அடிக்கடி வந்து சென்றார். நேற்று முன்தினம் குழந்தைக்கு திடீரென்று உடல் நலம் சரிஇல்லாமல் போனது. இசக்கிராஜ், இளம்பெண்ணும் குழந்தையை உடன்குடி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள், குழந்தை ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.இதுபற்றி அறிந்த குலசேகரன்பட்டினம் போலீசாரும் சம்பவ இடத்திற வந்தனர். குழந்தையின் உட கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தூத்துக்குடி…
திருச்சியை சேர்ந்தவர் வெல்லமண்டி நடராஜன். இவர் கடந்த 2021-ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் திருச்சி கிழக்கு சட்டமன்ற தொகுதியில் அ.தி.மு.க. சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். எடப்பாடி பழனிசாமி அமைச்சரவையில் சுற்றுலாத்துறை அமைச்சராகபதவி வகித்தார். அ.தி.மு.க.வில் பிளவு ஏற்பட்டபோது இவர் ஓ.பன்னீர்செல்வம் அணிக்கு மாறினார். இந்நிலையில் ஓ.பன்னீர்செல்வம் அணியில் இருந்த முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம், முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் நேற்று தி.மு.க.வில் இணைந்தார். அவருடன் முன்னாள் அமைச்சர் வெல்லமண்டி நடராஜனும் தி.மு.க.வில் சேரப்போவதாக தகவல் வெளியாகி இருந்தது. இந்நிலையில் தி.மு.க.வில் நான் இணைவதாக கூறுவது தவறான தகவல் என்று முன்னாள் அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் தெரிவித்தார். இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அவர், “நான் திருச்சியில் தான் இருக்கிறேன். வேறு எங்கும் செல்லவில்லை. எனக்கு தி.மு.க.வில் சேரும் எண்ணம் இல்லை. முன்னாள் முதல்-அமைச்சர்ஓ.பன்னீர்செல்வத்துடன் தொடர்ந்து பயணிப்பேன். அவர் எந்த முடிவு எடுத்தாலும் அது ஆணித்தரமான, நிரந்தரமான முடிவாக இருக்கும் என கருதுகிறேன்.…

